செய்திகள்

ராசிபுரம் அருகே விவசாயின் மாடு 2 கன்றுகளை ஈன்றது

Published On 2018-01-22 16:02 GMT   |   Update On 2018-01-22 16:02 GMT
ராசிபுரம் அருகே விவசாயின் மாடு 2 கன்றுகளை ஈன்றுள்ளதால் அதை பலரும் வியப்புடன் பார்த்துவிட்டுச் சென்றனர்.

ராசிபுரம்:

ராசிபுரம் அருகேயுள்ள காக்காவேரி மாதாகோவில் தெருவைச் சேர்ந்தவர் அருள் அகஸ்டியன். இவரது மகன் விமல்ராஜ் (வயது 31) விவசாயி. இவர் அவரது தீக்குச்சி செய்யும் மில் வளாகத்தில் 2 பசு மாடுகளை வளர்த்து வருகிறார். இதில் ஒரு பசுமாடு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலையில் 2 கன்றுகளை ஈன்றது.

முதலில் கெடாரி கன்றுக்குட்டியும் (பெண்), அடுத்த 1/2 மணி நேரத்தில் 2-வதாக காளைக் கன்று குட்டியும்(ஆண்) ஈன்றது. இதற்கு முன்பு இதே பசுமாடு 3 முறை கன்று போட்டுள்ளது. ஒவ்வொரு தடவையும் ஒரு கன்று மட்டுமே ஈன்றது. தற்போது அந்த பசுமாடு 4-வது முறையாக 2 கன்றுகளை ஈன்றது. 2 கன்றுகளை ஈன்ற பசுவும், கன்று குட்டிகளும் நலமாக உள்ளன. இதை காக்காவேரியைச் சேர்ந்த பலரும் வியப்புடன் பார்த்துவிட்டுச் சென்றனர். #tamilnews 

Tags:    

Similar News