செய்திகள்

வாணியம்பாடி அருகே ஆந்திர வியாபாரி கொலை

Published On 2017-12-13 05:47 GMT   |   Update On 2017-12-13 05:47 GMT
வாணியம்பாடி அருகே ஆந்திர வியாபாரியை கொலை செய்து ஏரியில் பிணத்தை வீசியுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாணியம்பாடி:

ஆந்திர மாநிலம் புங்கனூர் ராமசமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் சந்திரசேகர் (வயது40) மாட்டு வியாபாரம் செய்து வந்தார்.

வாணியம்பாடி தாலுகா அம்பலூர் அடுத்த தெயுருபட்டு கிராமத்தில் உள்ள பாம்பாட்டி ஏரியில் இன்று சந்திரசேகர் பிணமாக கிடந்தார். இதனைக்கண்டு திடுக் கிட்ட பொதுமக்கள் அம்பலூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். சந்திரசேகர் உடல் முழுவதும் காயங்கள் இருந்தன. அவரை கொலை செய்து ஏரியில் பிணத்தை வீசி சென்றுள்ளனர். போலீசார் உடலை கைப்பற்றி வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது குறித்து ஆந்திராவில் உள்ள அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சந்திரசேகரை கொலை செய்த கும்பல் யார்? எதற்காக கொலை செய்யப்பட்டார் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

திருப்பத்தூர் அடுத்த மாடப்பள்ளி ஏரியில் கடந்த 2-ந்தேதி துண்டிக்கப்பட்ட வாலிபர் தலை மீட்கப்பட்டது. அன்று மாலையில் சோமலாபுரம ஏரியில் தலையில்லாத உடல் ஒரு கை, கால் மீட்கப்பட்டன. அவர் யார்? கொலை செய்து வீசிய கும்பல் யார் என்பது தெரியவிலலை.

இவர்கள் இருவரும் ஆந்திராவை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

திருப்பத்தூர், வாணியம்பாடி, பகுதியில் தொடர் கொலை சம்பவங்கள் பொதுமக்களிடம் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News