செய்திகள்
கிறிஸ்தவ போதகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: அர்ஜூன் சம்பத்
வைகோ மதம் மாறியதாக தகவல் பரப்பும் கிறிஸ்தவ போதகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அர்ஜூன் சம்பத் வலியுறுத்தியுள்ளார்.
கோவை:
இந்து மக்கள் கட்சி நிறுவன தலைவர் அர்ஜூன் சம்பத் மற்றும் நிர்வாகிகள் இன்று கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து கலெக்டரிடம் மனு அளித்தனர். பின்னர் அர்ஜூன் சம்பத் நிருபர்களிடம் கூறியதாவது:-
தூத்துக்குடி மாவட்டம் நாலுமாவடியில் ஜெபக்கூடம் நடத்தி வரும் கிறிஸ்தவ மத போதகர் மோகன் சி.லாசரஸ் சமீபகாலமாக பேசிய பேச்சுக்கள் வாட்ஸ் அப்பில் வீடியோவாக வெளிவந்து கொண்டிருக்கிறது.
அதில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கிறிஸ்தவ மதத்திற்கு மாறி விட்டதாகவும், அவரது குடும்பத்தினர் கிறிஸ்தவ ஊழியம் செய்து வருவதாகவும், வைகோ தினமும் பைபிள் படிக்க கற்று வருவதாகவும் தகவல் பரவி வருகிறது.
ஆனால் இதனை வைகோ மறுத்துள்ளார். மோகன் சி.லாசரஸ் இவ்வாறு கூறி அப்பகுதி மக்களை மதமாற்றம் செய்து வருகிறார். எனவே மோகன் சி.லாசரஸ் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்து மக்கள் கட்சி நிறுவன தலைவர் அர்ஜூன் சம்பத் மற்றும் நிர்வாகிகள் இன்று கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து கலெக்டரிடம் மனு அளித்தனர். பின்னர் அர்ஜூன் சம்பத் நிருபர்களிடம் கூறியதாவது:-
தூத்துக்குடி மாவட்டம் நாலுமாவடியில் ஜெபக்கூடம் நடத்தி வரும் கிறிஸ்தவ மத போதகர் மோகன் சி.லாசரஸ் சமீபகாலமாக பேசிய பேச்சுக்கள் வாட்ஸ் அப்பில் வீடியோவாக வெளிவந்து கொண்டிருக்கிறது.
அதில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கிறிஸ்தவ மதத்திற்கு மாறி விட்டதாகவும், அவரது குடும்பத்தினர் கிறிஸ்தவ ஊழியம் செய்து வருவதாகவும், வைகோ தினமும் பைபிள் படிக்க கற்று வருவதாகவும் தகவல் பரவி வருகிறது.
ஆனால் இதனை வைகோ மறுத்துள்ளார். மோகன் சி.லாசரஸ் இவ்வாறு கூறி அப்பகுதி மக்களை மதமாற்றம் செய்து வருகிறார். எனவே மோகன் சி.லாசரஸ் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.