செய்திகள்

10, 11, 12-ம் வகுப்புகளுக்கான முன் அரையாண்டு தேர்வுகள் ரத்து - அரசு அறிவிப்பு

Published On 2017-11-07 12:44 GMT   |   Update On 2017-11-07 12:44 GMT
தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த 10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான முன் அரையாண்டு தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார்.
சென்னை:

வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் கடந்த 8 நாட்களாக கனமழை பெய்து வருகின்றது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதன் காரணமாக குடியிருப்புப்பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.

மழை தொடர்ந்து பெய்து வரும் மாவட்டங்களில் சுமார் 8 நாட்களாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அரையாண்டு தேர்வுக்கான பாடத்திட்டத்தை முடிக்க முடியவில்லை. இதனால், ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த 10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார்.

புதிய தேர்வுகால அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
Tags:    

Similar News