செய்திகள்

தலைமை செயலாளர் மாற்றம் குறித்து மத்திய அரசு கருத்து கேட்கவில்லை: நாராயணசாமி

Published On 2017-11-04 05:00 GMT   |   Update On 2017-11-04 05:00 GMT
தலைமை செயலாளர் மாற்றம் குறித்து மத்திய அரசு கருத்து கேட்கவில்லை என்று புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
புதுச்சேரி:

புதுவை தலைமை செயலாளராக பணியாற்றி வரும் மனோஜ் பரிதா டெல்லிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக புதிய தலைமை செயலாளராக டெல்லியை சேர்ந்த அஸ்வின் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

புதுவை தலைமை செயலாளர் மனோஜ் பரிதா முதல்-அமைச்சர் நாராயணசாமிக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தார்.



இதனால் கவர்னர் கிரண்பேடி மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு புகார் செய்ததன் பேரிலேயே அவர் இடமாற்றம் செய்யப்பட்டதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் தலைமை செயலாளர் மாற்றம் குறித்து தனக்கு எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை என முதல்-அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:-

பொதுவாக தலைமை செயலாளரை மாற்றும் போது மத்திய அரசு மாநில முதல்-அமைச்சரிடம் கலந்து ஆலோசிக்கும்.

ஆனால், தற்போது மத்திய அரசு எந்தவிதமான ஆலோசனையும் நடத்தாமல் தலைமை செயலாளரை மாற்றி உள்ளது. இதற்கு மத்தியிலும், மாநிலத்திலும் மாற்று கட்சி ஆட்சி நடைபெறுவதுதான் காரணம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News