செய்திகள்
தலைமை செயலாளர் மாற்றம் குறித்து மத்திய அரசு கருத்து கேட்கவில்லை: நாராயணசாமி
தலைமை செயலாளர் மாற்றம் குறித்து மத்திய அரசு கருத்து கேட்கவில்லை என்று புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
புதுச்சேரி:
புதுவை தலைமை செயலாளராக பணியாற்றி வரும் மனோஜ் பரிதா டெல்லிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக புதிய தலைமை செயலாளராக டெல்லியை சேர்ந்த அஸ்வின் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
புதுவை தலைமை செயலாளர் மனோஜ் பரிதா முதல்-அமைச்சர் நாராயணசாமிக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தார்.
இதனால் கவர்னர் கிரண்பேடி மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு புகார் செய்ததன் பேரிலேயே அவர் இடமாற்றம் செய்யப்பட்டதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் தலைமை செயலாளர் மாற்றம் குறித்து தனக்கு எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை என முதல்-அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:-
பொதுவாக தலைமை செயலாளரை மாற்றும் போது மத்திய அரசு மாநில முதல்-அமைச்சரிடம் கலந்து ஆலோசிக்கும்.
ஆனால், தற்போது மத்திய அரசு எந்தவிதமான ஆலோசனையும் நடத்தாமல் தலைமை செயலாளரை மாற்றி உள்ளது. இதற்கு மத்தியிலும், மாநிலத்திலும் மாற்று கட்சி ஆட்சி நடைபெறுவதுதான் காரணம்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதுவை தலைமை செயலாளராக பணியாற்றி வரும் மனோஜ் பரிதா டெல்லிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக புதிய தலைமை செயலாளராக டெல்லியை சேர்ந்த அஸ்வின் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
புதுவை தலைமை செயலாளர் மனோஜ் பரிதா முதல்-அமைச்சர் நாராயணசாமிக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தார்.
இதனால் கவர்னர் கிரண்பேடி மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு புகார் செய்ததன் பேரிலேயே அவர் இடமாற்றம் செய்யப்பட்டதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் தலைமை செயலாளர் மாற்றம் குறித்து தனக்கு எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை என முதல்-அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:-
பொதுவாக தலைமை செயலாளரை மாற்றும் போது மத்திய அரசு மாநில முதல்-அமைச்சரிடம் கலந்து ஆலோசிக்கும்.
ஆனால், தற்போது மத்திய அரசு எந்தவிதமான ஆலோசனையும் நடத்தாமல் தலைமை செயலாளரை மாற்றி உள்ளது. இதற்கு மத்தியிலும், மாநிலத்திலும் மாற்று கட்சி ஆட்சி நடைபெறுவதுதான் காரணம்.
இவ்வாறு அவர் கூறினார்.