செய்திகள்
அருள் பிரகாசம் - மனோஜ்

சோழவந்தான்-மதுரையில் டெங்கு காய்ச்சலுக்கு வாலிபர்-மாணவன் உயிரிழப்பு

Published On 2017-10-21 10:19 GMT   |   Update On 2017-10-21 10:19 GMT
சோழவந்தான்-மதுரையில் டெங்கு காய்ச்சலுக்கு வாலிபர்-மாணவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சோழவந்தான்:

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே உள்ள கொசவபட்டியைச் சேர்ந்தவர் அருள் பிரகாசம் (வயது 38) 100 நாள் வேலை திட்ட பொறுப்பாளராக பணியாற்றி வந்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு காய்ச்சலால் அவதிப்பட்ட அருள் பிரகாசத்தை மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருந்தது தெரிய வந்தது.

தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அருள்பிரகாசம் பரிதாபமாக இறந்தார்.

மதுரை அருகே உள்ள புதுதாமரைப்பட்டியைச் சேர்ந்தவர் ஞானம். இவரது மகன் மனோஜ்குமார் (7). அந்தப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தான்.

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மனோஜ்குமாரை மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவன் பரிதாபமாக இறந்தான்.



Tags:    

Similar News