செய்திகள்

கிருஷ்ணகிரி அருகே கார் மோதி கல்லூரி மாணவர் பலி

Published On 2017-05-24 15:30 GMT   |   Update On 2017-05-24 15:30 GMT
கிருஷ்ணகிரி அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி அருகே உள்ள நாகனப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் உலகநாதன். இவரது மகன் அனிஷ்குமார்(21). இவர் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.இ இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று தனது பைக்கில் கிருஷ்ணகிரி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். தண்டேகுப்பம் என்ற இடத்தில் சென்ற போது அவ்வழியே வந்த கார், அனிஷ்குமாரின் டூவீலர் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த  அவரை அவ்வழியே சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே அனிஷ்குமார் இறந்தார்.

இந்த விபத்து குறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News