search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கல்லூரி மாணவர் பலி"

    • சம்பவத்தன்று கல்லூரி செல்லும் பஸ்சை விட்டு விட்டதால் மோட்டார் சைக்கிளில் சென்றார்.
    • ஆண்டிபட்டி சாலையில் உள்ள பெருமாள் கோவில் ஓடை அருகில் சென்ற போது பைக் நிலைதடுமாறி கவிழ்ந்தது.

    தேவதானப்பட்டி:

    பெரியகுளம் அருகே உள்ள ஜெயமங்கலம் பள்ளித்தெருவைச் சேர்ந்த முத்துக்குமார் மகன் ஸ்ரீதர் (வயது 18). இவர் ஆண்டிபட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் மெக்கானிக்கல் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

    சம்பவத்தன்று கல்லூரி செல்லும் பஸ்சை விட்டு விட்டதால் மோட்டார் சைக்கிளில் சென்றார். ஆண்டிபட்டி சாலையில் உள்ள பெருமாள் கோவில் ஓடை அருகில் சென்ற போது பைக் நிலைதடுமாறி கவிழ்ந்தது.

    இதில் படுகாயமடைந்த ஸ்ரீதர் மதுரை ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து ஜெயமங்கலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அணைப்பட்டி சாலையில் சென்றபோது திடீரென நாய் குறுக்கே வந்ததால் பிரேக் பிடித்த போது தடுமாறி கீழே விழுந்தார்.
    • படுகாயமடைந்த கல்லூரி மாணவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    நிலக்கோட்டை:

    நிலக்கோட்டை அருகே சித்தர்கள்நத்தம் சக்கிலிய ப்பட்டியை சேர்ந்தவர் சென்றாயன் மகன் முகேஸ்க ண்ணா (வயது18). இவர் ஆத்தூர் அரசு கூட்டுறவு கலைக்கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

    தனது சகோதரி செல்ல ம்மாளுக்கு உடல்நிலை சரியில்லாததால் மருந்து வாங்க நிலக்ேகாட்டைக்கு பைக்கில் சென்றார். அணைப்பட்டி சாலையில் சென்றபோது திடீரென நாய் குறுக்கே வந்ததால் பிரேக் பிடித்தார். அப்போது நிலை தடுமாறி பைக்கில் இருந்து கீழே விழுந்தார்.

    அக்கம் பக்கத்தி னர் அவரை மீட்டு நிலக்கோ ட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்க ப்பட்ட முகேஸ்க ண்ணா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து நிலக்கோட்டை சப்-இன்ஸ்பெக்டர் அருண்பிர சாத் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • வீட்டில் தனியாக இருந்த மாணவர் பாத்ரூமில் உள்ள சுவிட்ச் அழுத்திய போது எதிர்பாரத விதமாக மின்சாரம் தாக்கி கீழே விழுந்தார்.
    • மயங்கிய வாலிபரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டம் எரியோடு அருகே குண்டாம்பட்டி, அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் நாகராஜன். அதே பகுதியில் பேக்கரி வைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவி முனீஸ்வரி. இவர்களது மகன் சுதர்சன் சக்திவேல் (வயது18). தனியார் கல்லூரியில் பொறியியல் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

    இந்நிலையில் இன்று காலை வழக்கம் போல் கணவன்-மனைவி இருவரும் பேக்கரிக்கு சென்று விட்டனர். வீட்டில் தனியாக இருந்த சுதர்சன், பாத்ரூமில் உள்ள சுவிட்ச் அழுத்திய போது எதிர்பாரத விதமாக மின்சாரம் தாக்கி கீழே விழுந்தார். இவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்தனர்.

    அங்கு மயங்கி கிடந்த இவரை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவம னைக்கு கொண்டு வந்தனர். அங்கு பரி சோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரி வித்தனர். இதனை அடுத்து பிரேத பரி சோதனை க்காக சுதர்சன் உடல் மருத்துவ மனையில் வைக்க ப்பட்டு ள்ளது. இச்சம்பவம் குறித்து எரியோடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கல்லூரி மாணவர் நீரில் மூழ்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    • கடந்த 2 நாட்களுக்கு முன்பு காவிரி ஆற்றில் மூழ்கி 3 வாலிபர்கள் இறந்தது குறிப்பிடத்தக்கது.

    கொடுமுடி:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்த சத்திய நாயக்கன் பாளையம், திருவள்ளுவர் காலனியை சேர்ந்தவர் காந்தி (வயது55). இவர் பெயிண்டர் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு 2 மகன்கள் மற்றும் 2 மகள்கள் உள்ளனர். இதில் இளைய மகன் மேகராஜ் (19) தனியார் கல்லூரியில் பி.சி.ஏ. 3-ம் ஆண்டு படி த்து வந்தார்.

    இந்நிலையில் நேற்று காந்தி தனது உறவினர் வீட்டு கிடா விருந்துக்காக இளைய மகன் மேகராஜை அழைத்துக்கொண்டு ஈரோடு மாவட்டம் பாசூர் அருகே உள்ள சங்கிலிகருப்பண்ணசாமி கோவிலுக்கு சென்றுள்ளார். கிடா விருந்தில் கலந்து கொண்டு விட்டு மேகராஜ் மற்றும் உறவினர்கள் 10 பேர் சங்கிலி கருப்பண்ணசாமி கோவிலுக்கு முன்பாக உள்ள காவிரி ஆற்றில் குளிக்க சென்றனர்.

    அங்கு மேகராஜ் மற்றும் உறவினர்கள் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த போது திடீரென மேகராஜ் நீரில் மூழ்க தொடங்கினார். அவருக்கு நீச்சல் தெரியாது. சிறிது நேரத்தில் மேகராஜ் நீரில் மூழ்கினார். உறவினர்கள் மேகராஜ் நீரில் மூழ்கியதை கண்டு கூச்சலிட்டனர்.

    உடனடியாக இதுகுறித்து கொடுமுடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து நீரில் மூழ்கிய மேகராஜை தேடினர். பின்னர் சிறிது நேரத்தில் மேகராஜை தண்ணீரில் இருந்து மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.

    இதையடுத்து அவரை கொடுமுடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர் மேகராஜ் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து மலையம்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கல்லூரி மாணவர் நீரில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு காவிரி ஆற்றில் மூழ்கி 3 வாலிபர்கள் இறந்தது குறிப்பிடத்தக்கது.

    • நிலை தடுமாறி கீழே விழுந்த தேவானந்த் லாரியின் பின்பக்க டயரில் சிக்கினார்.
    • விபத்து குறித்து திருப்பூர் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து லாரி டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மங்கலம் ரோடு சின்னாயி லே அவுட் பகுதியை சேர்ந்த ராஜ்குமார் என்பவரது மகன் தேவானந்த் (வயது 20). சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் தினமும் காலை உடல் பயிற்சி செய்வது வழக்கம்.

    இன்று காலை வழக்கம் போல் உடற்பயிற்சி செய்வதற்காக தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். குமரன் ரோடு எம்ஜிஆர்., சிலை அருகே செல்லும் போது, குமரன் ரோட்டை கடந்து பார்க் ரோடு வழியாக செல்ல முயன்றார். அப்போது குமரன் ரோட்டில் இருந்து பழைய பஸ் நிலையம் நோக்கி வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த தேவானந்த் லாரியின் பின்பக்க டயரில் சிக்கினார். இதில் அவரது வலது கை டயரில் சிக்கி சிதைந்தது.

    வலியால் துடித்துக் கொண்டிருந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் கோவை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடிவு செய்தனர். ஆனால் திடீரென தேவானந்த் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இந்த விபத்து குறித்து திருப்பூர் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து லாரி டிரைவர் சதீஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வேலூரை சேர்ந்தவர்
    • பஞ்சுமிட்டாய் தயாரிக்க சுவிட்சை ஆன் செய்தபோது விபரீதம்

    ஆரணி:

    வேலூர் தோட்டப்பாளையத்தை சேர்ந்தவர் அருள்மாறன் (வயது 19), ஆற்காட்டில் உள்ள தனியார் கல்லூரியில் பி காம் படித்து வந்தார்.

    கல்லூரி மாணவர்

    இவர் படித்துக் கொண்டு விடுமுறை நாட்களில் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளில் ஐஸ்கிரீம் உள்ளிட்ட பொருட்கள் தயாரித்து கொடுப்பது மற்றும் கேட்ரிங் வேலைக்கு சென்று வருவது வழக்கம்.

    இந்நிலையில், திருவண் ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த களம்பூர் பகுதியில் நேற்றுமுன்தினம் இரவு நடந்த ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பஞ்சுமிட்டாய், பாப்கான் தயாரித்து கொடுப்பதற்காக அருள்மாறன் சென்றார். அப்போது திடீரென மின்நிறுத்தம் ஏற்பட்டது.

    பின்னர், சிறிது நேரம் கழித்து மின்சாரம் வந்தது. மீண்டும் பாப்கான், பஞ்சுமிட்டாய் தயாரிக்க சுவிட்சை ஆன் செய்தார். அதிலிருந்த மின்சாரம் இவர் மீது பாய்ந்தது.

    இதில் அருள்மாறன் தூக்கி வீசப்பட்டு மயங்கி விழுந்தார். உடனே, அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு களம்பூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து, அருள் மாறனின் தந்தை குமார் நேற்று களம்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து அருள்மாறன் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இதுசம்பந்தமாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அரசு பஸ் மீது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மோதியது.
    • இதில் ராஜேஷ் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    மொடக்குறிச்சி:

    மொடக்குறிச்சி அருகே உள்ள ஊஞ்சபாளையத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகன் ராஜேஷ் (18). கல்லூரி மாணவர். மொடக்குறிச்சி அடுத்த பட்டறை வேலம்பாளையத்தை சேர்ந்த பாலசுப்பிரமணி மகன் பூபதி (17). இருவரும் நண்பர்கள்.

    இந்நிலையில் சம்பவத்தன்று மாலை மோட்டார் சைக்கிளில் ராஜேஷ், பூபதி மற்றும் பூபதியின் தம்பி கலைச்செல்வன் (15) ஆகிய 3 பேரும் பட்டறை வேலம்பாளையத்தில் இருந்து மூலனூர்-ஈரோடு ரோட்டில் சென்று கொண்டிருந்த போது வளைவில் திரும்பி உள்ளனர்.

    அப்போது மூலனூரில் இருந்து ஈரோடு நோக்கி வந்த அரசு பஸ் மீது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மோதியது.

    இதில் ராஜேஷ் சம்பவ இடத்திலேயே பலியானார். பூபதிக்கு லேசான காயமும், கலைச்செல்வனுக்கு பலத்த காயம் ஏற்பட்டு கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மொடக்குறிச்சி போலீசார் ராஜேஷ் உடலை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து மொடக்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு கிருஷ்ணா கால்வாயில் அதிகஅளவு தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது.
    • தண்ணீரின் வேகத்தில் இமானுவேல் இழுத்து செல்லப்பட்டார்.

    பெரியபாளையம்:

    வெங்கல் அருகே உள்ள பட்டாபிராம் அடுத்த தண்டுரை பகுதியை சேர்ந்தவர் இமானுவேல் (வயது18). இவர் பூந்தமல்லியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.டெக் படித்து வருகிறார்.

    தற்போது பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு கிருஷ்ணா கால்வாயில் அதிகஅளவு தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று மாலை இமானுவேல், தனது நண்பர்களுடன் புழல் ஏரிக்கு செல்லும் கிருஷ்ணா கால்வாயில் இறங்கி குளித்தார்.

    அப்போது தண்ணீரின் வேகத்தில் இமானுவேல் இழுத்து செல்லப்பட்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் அவரை காப்பாற்ற முயன்றும் முடியவில்லை.

    இதுகுறித்து வெங்கல் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் மற்றும் திருவூர் பகுதியில் இருந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கிருஷ்ணா கால்வாயில் மூழ்கிய மாணவர் இமானுவேலை தேடினர். இரவு வரை தேடியும் அவரை மீட்க முடியவில்லை.

    இந்த நிலையில் இன்று 2-வது நாளாக இமானுவேலை தேடும் பணி நடந்தது. அப்போது அதே பகுதியில் இருந்து சிறிது தூரத்தில் இமானுவேல் உடல் மீட்கப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • தாய், மகன் படுகாயம்
    • போலீசார் விசாரணை

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அருகே உள்ள சந்தவாசல் அடுத்த எட்டிவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி (வயது 65). இவரது மனைவி கிளியம்மாள் (45). இவர்களுக்கு வெங்கடேசன் (25), விக்னேஷ் (21) என 2 மகன்கள் உள்ளனர். விக்னேஷ் கலசபாக்கம் தனியார் கல்லூரியில் பிஎஸ்சி இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.

    வெங்கடேசன் வேலூர் இடையஞ் சாத்தில் வெல்டிங் வேலை செய்து வருகிறார். கிளியம்மாள் சித்தாள் வேலை செய்து வருகிறார்.

    நேற்று வேலை சம்பந்தமாக கிளியம்மாள், வெங்கடேசன், விக்னேஷ் ஆகியோர் பைக்கில் வேலூருக்கு வந்தனர். பின்னர் இரவு வேலூரில் இருந்து கண்ணமங்கலம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது பாலார்த்து வென்றான் கிராமத்தில் அருகே வரும்போது எதிரே வந்த தனியார் பஸ் இவர்கள் ஓட்டி வந்த பைக் மீது எதிர்பாராத விதமாக மோதியது.

    இதில் விக்னேஷ் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். கிளியம்மாள், வெங்கடேசன் ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இச்சம்பவம் குறித்து தட்சிணாமூர்த்தி சந்தவாசல் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பஸ்சை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பின்னால் வந்த தனியார் பள்ளி பஸ்சுக்காக ரோஷன் வழி விட ஒதுங்கினார்.
    • மோட்டார் சைக்கிளில் சென்ற ரோஷன் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார்.

    ஈரோடு:

    ஈரோடு மணல்மேடு பகுதியை சேர்ந்தவர் இருதயராஜ். இவரது மகன் ரோஷன் பிஜி (வயசு 19). இவர் ஈரோட்டில் உள்ள ஒரு கல்லூரியில் பி.காம். சி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று மாலை ரோஷன் பிஜி மோட்டார் சைக்கிளில் தனது நண்பரை ஈரோடு காளைமாட்டு சிலை அருகே இறக்கி விட்டு மீண்டும் மணல் மேட்டில் உள்ள தனது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    ஈரோடு சென்னிமலை ரோடு, பழைய கூட் செட் அருகே சென்று கொண்டிருந்த போது பின்னால் வந்த தனியார் பள்ளி பஸ்சுக்காக ரோஷன் வழி விட ஒதுங்கினார். அந்த பகுதியில் புதிதாக ரோடு போடுவதற்காக சாலையை தோண்டி வைத்துள்ளனர்.

    இதனால் மோட்டார் சைக்கிளில் சென்ற ரோஷன் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக பஸ்சின் பின் சக்கரம் ரோஷன் தலையில் ஏறி இறங்கியது. இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடிய ரோசனை ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். எனினும் சிகிச்சை பலனின்றி ரோஷன் பிஜி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த மாணவனின் உடலை பார்த்து அவரது பெற்றோர் அழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • நெமிலி அருகே பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த நெல்வாய் கிராமத்தைச் சேர்ந்த ரவி என்பவரின் மகன் விக்னேஷ் (19).இவர் ராமச்சந்திரா பாலிடெக்னிக் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.

    கல்லூரி மாணவர்

    இவர் நெமிலி அடுத்த அசநெல்லிப்குப்பம் பகுதியில் இரவு நடந்த திருவிழாவை முடித்துவிட்டு தனது நண்பர்களுடன் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியில் இருந்த வயல்வெளியில் சிறுநீர் கழிப்பதற்காக இறங்கியுள்ளார்.வயல்வெளியில் பன்றிக்காக வைக்கப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்கினார். இதில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நெமிலி போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் சம்பவ இடத்தில் அரக்கோணம் ஏ.எஸ்.பி. கிரிஸ்யாதவ் விசாரணை மேற்கொண்டார்.

    இது தொடர்பாக விளை நிலத்தின் உரிமையாளர் அலிநெல்லிக்குப்பம் பகுதியை சேர்ந்த வரதன் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • வயல்வெளியில் பன்றிக்காக வைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி 19 வயதான கல்லூரி மாணவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    • வயல்வெளி உரிமையாளரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அரக்கோணம்:

    அரக்கோணம் அருகே அசநெல்லிக்குப்பம் பகுதியல் கோவில் திருவிழாவுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய கல்லூரி மாணவர் மின்வேலியில் சிக்கி உயிரிழந்தார்.

    வயல்வெளியில் பன்றிக்காக வைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி 19 வயதான கல்லூரி மாணவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இதுதொடர்பாக வயல்வெளி உரிமையாளர் வரதனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×