என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
நண்பர்களுடன் காரில் சென்றபோது விபத்து:கல்லூரி மாணவர் பலி
Byமாலை மலர்23 Jan 2023 9:42 AM GMT
- சாலை நடுவே இருந்த தடுப்பு கட்டையில் கார் மோதி விபத்துக்குள்ளானது.
- இம்ரானை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம் அரூர் கீழ் பாட்சா தெருவை சேர்ந்தவர் பாபு. இவரது மகன் இம்ரான் (வயது 19). கல்லூரி மாணவர்.இவர் தனது நண்பர்கள் சிலருடன் ஒரு காரில் நேற்று சேலம் நோக்கி சென்றுள்ளார். சொக்கராபட்டி சாலையில் கார் சென்றபோது முன்னால்ஒரு லாரி சென்றது.
காரை ஒட்டி சென்ற இம்ரான் அந்த லாரியை முந்தி செல்ல முயன்றார். அப்போது நிலைதடுமாறிய கார் சாலை நடுவே இருந்த தடுப்பு கட்டையில் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் இம்ரானுக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டது.
அவரை உடனே மீட்டு தருமபுரி தனியார் மருத்துவமனையில் சேர்த்து முதலுதவி அளித்தனர். பின்னர் சேலத்தில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு இம்ரானை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இந்த விபத்து குறித்து கோபிநாதம்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X