செய்திகள்

ஆண்டிப்பட்டி அருகே விபத்தில் சிக்கியவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்த கனிமொழி

Published On 2017-05-22 12:48 GMT   |   Update On 2017-05-22 12:48 GMT
ஆண்டிப்பட்டி அருகே விபத்தில் சிக்கியவர்களை கனிமொழி எம்.பி. மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தார்.

ஆண்டிப்பட்டி:

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள மரிக்குண்டு பகுதியைச் சேர்ந்தவர் ஆசைத் தம்பி (வயது 30). பாப்பம்மாள்புரத்தைச் சேர்ந்த தங்கபாண்டி (27) இவர்கள் 2 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் தேனியில் இருந்து ஊருக்கு வந்து கொண்டு இருந்தனர்.

குன்னூர் டோல்கேட் பக்கம் சென்ற போது எதிர்பாராத விதமாக அந்த வழியாக சென்ற டிராக்டர் மீது மோதினர். இதில் அவர்கள் நிலை தடுமாறி கீழே விழுந்து படுகாயமடைந்தனர்.

அப்போது அந்த வழியாக தி.மு.க. மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. கம்பம் பகுதியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு மதுரை நோக்கி காரில் வந்து கொண்டு இருந்தார். விபத்தில் சிக்கி உயிருக்கு போராடுபவர்களை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

உடனே காரை நிறுத்தி 2 பேரையும் கட்சி நிர்வாகிகள் உதவியுடன் மீட்டு அவர்களை தேனி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அதன் பின்னர் அவர் மதுரை புறப்பட்டு சென்றார்.

Tags:    

Similar News