செய்திகள்

நெல்லை அருகே திருமணமான 3 மாதத்தில் புதுப்பெண் கடத்தல்?

Published On 2017-04-29 13:15 GMT   |   Update On 2017-04-29 13:15 GMT
நெல்லை அருகே திருமணமான 3 மாதத்தில் புதுப்பெண் மாயமானார். இது குறித்து அவரது தாய் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நெல்லை:

நெல்லையை அடுத்த சுத்தமல்லி நாராயணசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் ராமலிங்கம். இவரது மகள் சீதாலட்சுமி (வயது 19). இவர் தனியார் பாலிடெக்னிக்கில் படித்து வருகிறார். அப்போது அவருடன் படிக்கும் எர்ணாகுளத்தை சேர்ந்த குஞ்சச்சன் என்ற மாணவருடன் சீதாலட்சுமிக்கு காதல் உண்டானது.

இருவரும் தீவிரமாக காதலித்து வந்தனர். இவர்களது காதல் விவகாரம் சீதாலட்சுமியின் பெற்றோருக்கு தெரியவந்தது. இதை தொடர்ந்து சீதாலட்சுமியை அவரது உறவினர் மகன் கணேசன் என்பவருக்கு திருமணம் செய்து வைத்தனர். கணேசன் சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக உள்ளார்.

திருமணத்துக்கு பின்னர் சில நாட்கள் ஊரில் இருந்த கணேசன் பின்னர் சென்னைக்கு வேலைக்கு சென்றுவிட்டார். சீதாலட்சுமி தனது தாய் வீட்டில் இருந்து கல்லூரிக்கு சென்று வந்தார். இந்த நிலையில் கடந்த 27ந்தேதி கல்லூரிக்கு சென்ற சீதாலட்சுமி அதன்பிறகு வீடு திரும்பவில்லை. அக்கம் பக்கத்தில் தேடியும் அவர் கிடைக்க வில்லை.

இதுபற்றி சீதாலட்சுமியின் தாய் பாக்கியலட்சுமி சுத்தமல்லி போலீசில் புகார் செய்தார். போலீசார் காணாமல் போன புதுப்பெண் சீதாலட்சுமியை தேடி வருகிறார்கள். சீதாலட்சுமியை காதல் விவகாரத்தில் அவருடன் படித்த எர்ணாகுளத்தை சேர்ந்த குஞ்சச்சன் கடத்தி சென்றாரா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News