search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தாய் புகார்"

    • சாமிதுரை புதுவை மாநிலம் பாகூரில் தனியார் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.
    • எங்கு தேடியும் சுகாசினி கிடைக்காததால் இதுகுறித்து பேபி புவனகிரி போலீசில் புகார் அளித்தார்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் மேல்புவனகிரி அருகே அங்காளம்மான் கோவில் பகுதியை சேர்ந்தவர் சாமிதுரை. இவரது மகள் சுகாசினி (வயது 20). சாமிதுரை புதுவை மாநிலம் பாகூரில் தனியார் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். சாமிதுரை பாகூரில் தங்கி வேலை பார்த்து மாதம் ஒரு முறை அல்லது நீண்ட நாட்கள் கழித்து மேல்புவனகிரியிலுள்ள தனது வீட்டிற்கு வருவார். இந்நிலையில் நேற்று முன்தினம் சாமிதுரை வேலை முடிந்து வீட்டிற்கு வந்தார்.

    மீண்டும் நேற்று இரவு பாகூருக்கு வேலைக்கு சென்றுள்ளார். இந்நிலையில் வீட்டிலிருந்த சுகாசினி திடீரென மாயம் ஆனார். ஆனால் வீட்டிலிருந்தவர்கள் இவரது தந்தையை பஸ்சில் வேலைக்கு ஏற்றி விட சென்றுள்ளனர் என நினைத்தனர். ஆனால் நீண்ட நேரமாகியும் சுகாசினி வீட்டிற்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்து சுகாசினி தாய் பேபி இவரை பல இடங்களில் தேடினர். ஆனால் எங்கு தேடியும் சுகாசினி கிடைக்கவில்லை. இதுகுறித்து பேபி புவனகிரி போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சுகாசினி எங்கு சென்றார். என்ன ஆனார் யாரேனும் இவரை கடத்தி சென்றனரா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பாரதி தேவியாகுறிச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் பட்டப் படிப்பு படித்து வருகிறார்.
    • பாரதி வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராய பாளையம் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட எடுத்த வாய்நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் குமார் இவருக்கு பொன்மொழி என்ற மனைவியும் பாரதி (வயது 19) என்ற மகளும் உள்ளனர். பாரதி தேவியாகுறிச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் பட்டப் படிப்பு படித்து வருகிறார்.

    இந்நிலையில் நேற்று காலை கடைக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்ற பாரதி வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த பெற்றோர் பாரதியை தேடினர். அவர் எங்கு தேடியும் கிடைக்காததால் கச்சிராயபாளையம் போலீஸ் நிலையத்தில் பாரதியின் தாயார் பொன்மொழி கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன பாரதியை தேடி வருகின்றனர்.

    • நித்யா (வயது 21) என்பவருக்கும் கடந்த 4 மாதத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
    • வருவாய் கோட்டாட்சியர் பவித்ரா விசாரணை செய்து வருகிறார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி அருகே விளம்பார் கிராமத்தைச் சேர்ந்தரங்கன் மகன் ஈஸ்வரமூர்த்தி (வயது 29) சென்னையில் லாரி டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் சேலம் மாவட்டம்ஆத்தூர் அருகே அம்மாபாளையம் பகுதியை சேர்ந்தமுருகேசன் மகள் நித்யா (வயது 21) என்பவருக்கும் கடந்த 4 மாதத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றது. நித்யா 2 மாத கர்ப்பி ணியாகஇருந்ததால் அடிக்கடி வாந்தி, மயக்கம் இருந்துள்ளது. நேற்று வீட்டில் யாரும் இல்லாதபோது நித்யா தூக்கிட்டு கொண்டார். அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை பரிசோ தனை செய்த மருத்துவர்கள் நித்யா இறந்து போனதாக கூறினர். இதுகுறித்து நித்தியாவின் தாய் பத்மாவிற்கு உனது மகள் நித்யா இறந்து போனதாக தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து வந்த அவர் தனது மகள் இறப்பில் சந்தேகம்உள்ளதாக கள்ளக்குறிச்சி போலீசில் புகார் அளித்துள்ளார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். நித்தியாவுக்கு திருமணம் ஆகி 4 மாதமே ஆவதால் வருவாய் கோட்டாட்சியர் பவித்ரா விசாரணை செய்து வருகிறார்.

    ×