செய்திகள்

ஏழரைக்கு எடப்பாடி பழனிச்சாமி, எட்டரைக்கு ஓ.பன்னீர் செல்வம் இன்று கவர்னருடன் சந்திப்பு

Published On 2017-02-15 13:52 GMT   |   Update On 2017-02-15 13:52 GMT
இன்றிரவு ஏழரை மணியளவில் எடப்பாடி பழனிச்சாமியும், எட்டரை மணியளவில் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவை சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
சென்னை:

தமிழக அரசியல் சூழ்நிலை உச்சகட்ட பரபரப்பு நிலையை எட்டியுள்ள நிலையில், அ.தி.மு.க சட்டமன்ற கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, நேற்று கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்து தன்னுடைய ஆதரவு எம்.எல்.ஏக்கள் கடிதத்தை வழங்கி ஆட்சியமைக்க அழைக்குமாறு கோரிக்கை விடுத்தார்.

இதையடுத்து, கவர்னர் தரப்பிலிருந்து எந்த அழைப்பும் விடுக்காததால், அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று மாலை கவர்னருக்கு நினைவூட்டல் கடிதம் ஒன்றையும் அனுப்பியிருந்தார்.

இந்நிலையில், அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று இரவு 7.30 மணிக்கு கவர்னரை சந்திப்பதற்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல், 8.30 மணியளவில் முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் கவர்னரை சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Similar News