செய்திகள்
ஆசிய கோப்பை கிரிக்கெட் - ஆப்கானிஸ்தான் வெற்றி பெற 250 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது வங்காளதேசம்
ஆசிய கோப்பை கிரிக்கெட்டின் சூப்பர் 4 சுற்றில் நடந்த மற்றொரு போட்டியில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற 250 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது வங்காளதேசம் அணி. #AsiaCup2018 #BANvAFG #AFGvBAN
அபுதாபி:
அபுதாபியில் நடைபெற்று வரும் கிரிக்கெட்டின் சூப்பர் 4 சுற்றில் நடந்த மற்றொரு போட்டியில் இன்று வங்காளதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின.
டாஸ் வென்ற வங்காளதேசம் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக
லித்தன் தாசும், நஜ்மல் உசைன் ஷண்டோவும் களமிறங்கினர்.
லித்தன் தாஸ் 41 ரன்களுடனும், முஷ்பிகுர் ரகுமான் 33 ரன்களுடனும் அவுட்டாகினர். மற்ற வீரர்கள் விரைவில் அவுட்டாகினர். இதனால் 87 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.
அடுத்து ஜோடி சேர்ந்த இம்ருல் கெய்சும் மகமதுல்லாவும் இணைந்து பொறுப்புடன் விளையாடினர். இதனால் வங்காளதேசம் அணி 200 ரன்களை கடந்தது.
இறுதியில், வங்காளதேசம் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 250 ரன்களை எடுத்துள்ளது. மகமதுல்லா 74 ரன்களில் ஆட்டமிழந்தார். இம்ருல் கெய்ஸ் இறுதி வரை ஆட்டமிழக்காமல் 72 ரன்களை எடுத்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் சார்பில் அல்தாப் ஆலம் 3 விக்கெட்டும், முஜிபுர் நயீப், குல்புதின் நயீப் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினார்.
இதையடுத்து, 250 ரன்களை இலக்காக கொண்டு ஆப்கானிஸ்தான் விளையாடி வருகிறது. #AsiaCup2018 #BANvAFG #AFGvBAN