செய்திகள்

முதல் டி-20: டாஸ் வென்ற இலங்கை பீல்டிங் தேர்வு - இந்திய அணியில் உனத்கண்ட், ராகுலுக்கு இடம்

Published On 2017-12-20 13:24 GMT   |   Update On 2017-12-20 13:24 GMT
கட்டக் நகரில் நடைபெறும் முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பீல்டிங் தேர்வு செய்துள்ளது.
புபனேஷ்வர்:

இந்தியா வந்துள்ள இலங்கை அணி 3 டெஸ்ட், 3 ஒருநாள் கொண்ட தொடர்களை இந்தியாவிடம் இழந்தது. இரண்டு டி20 போட்டிகளில் கொண்ட தொடரில் முதல் போட்டி கட்டாக் நகரில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை பீல்டிங் செய்ய முடிவெடுத்தது.

அணி விபரங்கள்:  

இந்தியா:- ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர், தினேஷ் கார்த்திக், தோனி, மனிஷ் பாண்டே, பாண்டியா, உனத்கண்ட், குல்தீப் யாதவ், பும்ரா, சாஹல்

இலங்கை:- உபுல் தரங்கா, நிரோஷன் திக்வெல்லா, குஷல் பெரேரா, மேத்யூஸ், அசீலா குனரத்னே, திசரா பெரேரா, துசன் சனகா, துஷ்மந்தா சமீரா, அகிலா தனஞ்செயா, விஷ்வா பெர்னாண்டோ, நுவான் பிரதீப்
Tags:    

Similar News