இந்தியா
null
பொன்முடி மனு... வெள்ளிக்கிழமை உச்சநீதிமன்றத்தில் விசாரணை
- பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.
- 3 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பொன்முடி வழக்கு தாக்கல் செய்து இருந்தார்.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சிக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.
இதையடுத்து 3 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பொன்முடி மனு தாக்கல் செய்து இருந்தார். இந்நிலையில் பொன்முடி தாக்கல் செய்த மனு நாளை மறுநாள் அதாவது வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வர உள்ளது.