இந்தியா
கொரோனா தடுப்பூசி

கர்நாடகாவில் முதல் டோஸ் தடுப்பூசி 100 சதவீதம் செலுத்தப்பட்டுள்ளது - சுகாதார மந்திரி பெருமிதம்

Published On 2022-01-23 09:37 GMT   |   Update On 2022-01-23 09:37 GMT
பெங்களூரு நகரில் கொரோனா தொற்று பரவல் அதிகமாக உள்ளதால் வரும் 29-ம் தேதி வரை பள்ளிக்கூடங்கள் மூடியிருக்கும் என கர்நாடகா அரசு தெரிவித்துள்ளது.
பெங்களூரு:

இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலத்தைத் தொடர்ந்து கர்நாடகா மாநிலத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது.

இதனால் கொரோனாதொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் ஜனவரி 7-ம் தேதி வெள்ளிக்கிழமை இரவு 10 மணி முதல் திங்கட்கிழமை காலை 5 மணி வரை வாராந்திர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. 
 
தொற்று பரவல் அதிகரித்து வருவதைக் கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவை தீவிரப்படுத்துவதற்கான ஆலோசனைக் கூட்டம் முதல் மந்திரி பசவராஜ் தலைமையில் நடந்தது. அதில், வாராந்திர ஊரடங்கு உத்தரவை ரத்து செய்வதாக அரசு அறிவித்தது. ஆனால், இரவுநேர ஊரடங்கு வழக்கம்போல் அமலில் இருக்கும் என தெரிவித்துள்ளது. 

இந்நிலையில், கர்நாடக மாநிலத்தில் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் 100 சதவீதம் செலுத்தப்பட்டு உள்ளது என அம்மாநில சுகாதார மந்திரி சுதாகர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில், நாம் சாதித்துள்ளோம். சரியாக ஒரு ஆண்டு 7 நாளில் தடுப்பூசியின் முதல் டோஸ் 100 சதவீதம் செலுத்தப்பட்டு விட்டது. இந்தியாவிலே முதல் மாநிலமாக கர்நாடகம் இதைச் செய்துள்ளது. அனைத்து சுகாதார பணியாளர்கள் மற்றும் மாவட்ட நிர்வாக அதிகாரிகளால் தான் இந்த சாதனையை நிகழ்த்த முடிந்தது என பதிவிட்டுள்ளார்.

Tags:    

Similar News