இந்தியா

பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தல்: 1 மணி நிலவரப்படி 40 சதவீதம் வாக்குகள் பதிவு

Published On 2024-04-26 09:12 GMT   |   Update On 2024-04-26 09:12 GMT
  • 13 மாநிலங்களில் உள்ள 88 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது.
  • வாக்காளர்கள் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

இந்திய பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது.

இதில் முதற்கட்டமாக தமிழகத்தின் 39 தொகுதிகள் உள்பட 102 தொகுதிகளில் கடந்த 19-ந்தேதி வாக்குப்பதிவு நடந்தது.

இதைத்தொடர்ந்து 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 88 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது.

2-ம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. கேரளா, கர்நாடகா, ராஜஸ்தான், மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், அசாம், பீகார், சத்தீஸ்கர், மேற்கு வங்காளம், மணிப்பூர், திரிபுரா, காஷ்மீர் போன்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

வாக்காளர்கள் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

இந்நிலையில் 2-ம் கட்ட தேர்தலில் 1 மணி நிலவரப்படி அசாம் 46.31%, பீகார் 33.80%, சத்தீஸ்கர் 53.09%, ஜம்மு-காஷ்மீர் 42.88%, கர்நாடகா 38.23%, கேரளா 39.26%, மத்தியபிரதேசம் 38.96%, மகாராஷ்டிரா 31.77%, மணிப்பூர் 54.26%, ராஜஸ்தான் 40.39%, திரிபுரா - 54.47%, உ.பி.யில் 35.73%, மேற்கு வங்காளம் 47.29% வாக்குகள் பதிவாகி உள்ளது.

Tags:    

Similar News