இந்தியா

'மோடியை திட்டுபவர்களுக்கு'... முஸ்லிம் பெண்களிடம் கொடுத்த போர்வையைத் திரும்பப் பெற்ற பாஜக தலைவர்

Published On 2026-02-23 16:55 IST   |   Update On 2026-02-23 16:58:00 IST
  • தனிப்பட்ட உதவி என்பதால் யாருக்கு வழங்க வேண்டும் என்பதைத் தானே தீர்மானிப்பேன்
  • மதத்தின் அடிப்படையில் கொடுத்த உதவியை திரும்பப் பெறுவது மனிதாபிமானமற்ற செயல்

ராஜஸ்தானில் பிரதமர் மோடி பிப்.28 அன்று சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார். இந்நிலையில் இச்சுற்றுப்பயணத்தில் கலந்துகொள்ளுமாறு பொதுமக்களை அழைக்க ராஜஸ்தானின் டோங்க் மாவட்டத்தில் உள்ள கரேடா என்ற கிராமத்திற்கு சென்றுள்ளார் பாஜக முன்னாள் எம்.பி. சுக்பீர் சிங் ஜானபுரியா.

பிரதமர் மோடியின் வருகை குறித்து மக்களிடம் பரப்புரை செய்து கொண்டிருந்தபோது, அங்குவந்த பெண்களுக்கு போர்வைகள் வழங்கியுள்ளார். அப்போது ஒரு பெண்ணின் பெயரை கேட்டுள்ளார். அவர் தனது பெயரை சொன்னவுடன் அவர் முஸ்லீம் என தெரியவர அவருக்கு கொடுத்தப் போர்வையை திரும்பப் பெற்றுள்ளார். மேலும் அங்கிருந்த முஸ்லீம் பெண்களுக்கு கொடுத்த அனைத்துப் போர்வைகளும் திரும்ப பெறப்பட்டுள்ளது.

அதற்கு "பிரதமர் நரேந்திர மோடியைத் திட்டுபவர்களுக்கு போர்வை வாங்க உரிமையில்லை" என்றும் "நீங்கள் வருத்தப்பட்டாலும் எனக்குக் கவலையில்லை" என்றும் கூறியுள்ளார். இதுதொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இது ஒரு அரசுத் திட்டம் அல்ல என்றும், தனது சொந்தப் பணத்தில் செய்யப்படும் தனிப்பட்ட உதவி என்பதால் யாருக்கு வழங்க வேண்டும் என்பதைத் தானே தீர்மானிப்பேன் என்றும் கூறியுள்ளார். இதற்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.  

பல பெண்கள் மணிக்கணக்காக காத்திருந்தும் வெறுங்கையுடன் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். ஏழை மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு போர்வைகளை வழங்கிய பிறகு அவர்களின் பெயரைக் கேட்டு, பின்னர் அவர்களின் மதத்தின் அடிப்படையில் அவற்றை திரும்பப் பெறுவது மனிதாபிமானமற்ற செயல் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். 


Tags:    

Similar News