செய்திகள்
தடுப்பூசி மையத்துக்கு வரும் ஒவ்வொருவருக்கும் தடுப்பூசி போட வேண்டும் - ராகுல் காந்தி
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை சரிந்து வருகிறது.
புதுடெல்லி:
இந்தியாவில் கொரோனா-வைரஸ் பாதிப்பின் இரண்டாவது அலை மெல்ல மெல்ல கட்டுக்குள் வரத்தொடங்கியுள்ளது. அந்த வகையில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்திற்கு கீழ் பதிவாகி வருகிறது.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:
கொரோனா-வைரஸ் தடுப்பூசி போடுவதற்கு ஆன்லைன் பதிவு மட்டும் போதுமானது அல்ல. இணைய தள வசதி இல்லாதவர்களுக்கும் வாழும் உரிமை உண்டு.
எனவே ஆன்லைனில் பதிவு செய்யாமல், தடுப்பூசி மையத்துக்கு நேரடியாக வரும் ஒவ்வொருவருக்கும் தடுப்பூசி போட வேண்டும் என பதிவிட்டுள்ளார்.