செய்திகள்
மோடி அரசின் கொள்கை இல்லா தடுப்பூசி திட்டம் - ராகுல் காந்தி விமர்சனம்
கொரோனாவுக்கு பிறகு 97 சதவீத இந்தியர்கள் மேலும் ஏழைகளாக மாறியிருப்பதாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
புதுடெல்லி:
மத்திய அரசு கொரோனாவை கையாளும் விதம் மற்றும் பின்பற்றி வரும் தடுப்பூசி கொள்கையை காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து குறைகூறி வருகிறார். குறிப்பாக, மத்திய அரசு தடுப்பூசி திட்டத்தில் எந்த கொள்கையையும் கொண்டிருக்கவில்லை என அவர் சாடியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், ‘மோடி அரசின் கொள்கை இல்லா தடுப்பூசி திட்டம், அன்னை இந்தியாவின் இதயத்தில் வாளாக குத்துகிறது. சோகமான உண்மை’ என பதிவிட்டுள்ளார்.
இதேபோல், கொரோனாவுக்கு பிறகு இந்தியாவில் வேலையில்லா திண்டாட்ட விகிதம் இரட்டை இலக்கத்தில் சென்றிருப்பதாக வெளியாகி இருக்கும் செய்திகளைச் சுட்டிக்காட்டி பிரதமர் மோடியை அவர் கண்டித்துள்ளார்.
‘ஒரு மனிதரும், அவரது ஆணவமும் மற்றும் ஒரு வைரசும், அதன் மாறுபாடுகளும்’ என மற்றொரு பதிவில் குறிப்பிட்டுள்ள ராகுல் காந்தி, கொரோனாவுக்கு பிறகு 97 சதவீத இந்தியர்கள் மேலும் ஏழைகளாக மாறியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு கொரோனாவை கையாளும் விதம் மற்றும் பின்பற்றி வரும் தடுப்பூசி கொள்கையை காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து குறைகூறி வருகிறார். குறிப்பாக, மத்திய அரசு தடுப்பூசி திட்டத்தில் எந்த கொள்கையையும் கொண்டிருக்கவில்லை என அவர் சாடியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், ‘மோடி அரசின் கொள்கை இல்லா தடுப்பூசி திட்டம், அன்னை இந்தியாவின் இதயத்தில் வாளாக குத்துகிறது. சோகமான உண்மை’ என பதிவிட்டுள்ளார்.
இதேபோல், கொரோனாவுக்கு பிறகு இந்தியாவில் வேலையில்லா திண்டாட்ட விகிதம் இரட்டை இலக்கத்தில் சென்றிருப்பதாக வெளியாகி இருக்கும் செய்திகளைச் சுட்டிக்காட்டி பிரதமர் மோடியை அவர் கண்டித்துள்ளார்.
‘ஒரு மனிதரும், அவரது ஆணவமும் மற்றும் ஒரு வைரசும், அதன் மாறுபாடுகளும்’ என மற்றொரு பதிவில் குறிப்பிட்டுள்ள ராகுல் காந்தி, கொரோனாவுக்கு பிறகு 97 சதவீத இந்தியர்கள் மேலும் ஏழைகளாக மாறியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.