செய்திகள்
ராகுல் காந்தி

கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி முக்கியம்: ராகுல் காந்தி கருத்து

Published On 2021-05-25 01:55 GMT   |   Update On 2021-05-25 01:55 GMT
‘‘கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்த தடுப்பூசி போடுவது முக்கியம். ஆனால், இதைப்பற்றி மத்திய அரசு கவலைப்படுவதாக தெரியவில்லை’’ என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.
புதுடெல்லி :

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி நேற்று தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டார்.

அதில், ‘‘கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்த தடுப்பூசி போடுவது முக்கியம். ஆனால், இதைப்பற்றி மத்திய அரசு கவலைப்படுவதாக தெரியவில்லை’’ என்று அவர் கூறியுள்ளார்.

மேலும், தடுப்பூசி போடுவோர் எண்ணிக்கை வீழ்ச்சி அடைந்ததை குறிக்கும் வரைபடத்தையும் அவர் வெளியிட்டுள்ளார். அதில், ஏப்ரல் மாதத்தில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 29 லட்சத்து 95 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போட்ட நிலையில், மே மாதத்தில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 18 லட்சத்து 44 ஆயிரம் பேருக்கு மட்டுமே போடப்படுவதாக காட்டப்பட்டுள்ளது.
Tags:    

Similar News