செய்திகள்
தமிழகம் வர பிரதமர் மோடிக்கு அழைப்பு- டெல்லியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேட்டி
புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்ட தமிழகம் வருமாறு பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்ததாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
புதுடெல்லி:
டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* வண்ணாரப்பேட்டை-விம்கோ நகர் மெட்ரோ ரெயில் சேவை தொடக்க விழாவுக்கு பிரதமரை அழைத்தேன்.
* காவிரி-குண்டாறு இணைப்பு திட்டம், கல்லணை சீரமைப்பு திட்டங்களை தொடங்கி வைக்க பிரதரை அழைத்தேன்.
* புயல்களால் பாதிக்கப்பட்டுள்ள தமிழக விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க நிதியுதவி அளிக்க கோரினேன். தனது கோரிக்கைகளை பரிசீலிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
* புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்ட வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் கோரிக்கை வைத்தேன். எனது கோரிக்கைகளை ஏற்று பிரதமர் மோடி தமிழகம் வருவதாக கூறி உள்ளார்.
* இந்தியாவிலேயே உயர்கல்வியில் தமிழகம் சிறந்து விளங்குகிறது.
* துறைவாரியான கோரிக்கைகள் தொடர்பாக பிரதமரிடம் மனுக்கள் அளித்துள்ளேன்.
* இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட படகுகளை மீட்கக்கோரி பிரதமரிடம் கோரிக்கை விடுத்தேன். எனது கோரிக்கையை ஏற்று இலங்கை சிறையில் இருந்து 40 மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
* பன்னாட்டு நிதி நிறுவனங்களிடம் நிதி ஆதாரம் பெற அனுமதி அளிக்க கோரிக்கை விடுத்தேன்.
* நல்ல சாலைகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளதால் தமிழகத்தில் விபத்துகள் குறைந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* வண்ணாரப்பேட்டை-விம்கோ நகர் மெட்ரோ ரெயில் சேவை தொடக்க விழாவுக்கு பிரதமரை அழைத்தேன்.
* காவிரி-குண்டாறு இணைப்பு திட்டம், கல்லணை சீரமைப்பு திட்டங்களை தொடங்கி வைக்க பிரதரை அழைத்தேன்.
* புயல்களால் பாதிக்கப்பட்டுள்ள தமிழக விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க நிதியுதவி அளிக்க கோரினேன். தனது கோரிக்கைகளை பரிசீலிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
* புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்ட வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் கோரிக்கை வைத்தேன். எனது கோரிக்கைகளை ஏற்று பிரதமர் மோடி தமிழகம் வருவதாக கூறி உள்ளார்.
* இந்தியாவிலேயே உயர்கல்வியில் தமிழகம் சிறந்து விளங்குகிறது.
* துறைவாரியான கோரிக்கைகள் தொடர்பாக பிரதமரிடம் மனுக்கள் அளித்துள்ளேன்.
* இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட படகுகளை மீட்கக்கோரி பிரதமரிடம் கோரிக்கை விடுத்தேன். எனது கோரிக்கையை ஏற்று இலங்கை சிறையில் இருந்து 40 மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
* பன்னாட்டு நிதி நிறுவனங்களிடம் நிதி ஆதாரம் பெற அனுமதி அளிக்க கோரிக்கை விடுத்தேன்.
* நல்ல சாலைகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளதால் தமிழகத்தில் விபத்துகள் குறைந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.