செய்திகள்
50 வயது அங்கன்வாடி ஊழியருக்கு நடந்த பயங்கரம்- 3 பேரை தேடுகிறது போலீஸ்
உத்தர பிரதேசத்தில் அங்கன்வாடி பெண் ஊழியரை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பதான்:
உத்தர பிரதேச மாநிலம் பதான் மாவட்டம் உகைத்தி பகுதியில் 50 வயது மதிக்கத்தக்க அங்கன்வாடி பெண் ஊழியர் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனையில், அந்தப் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டது தெரியவந்தது.
பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் உறவினர் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, 3 பேரைத் தேடி வருகின்றனர். அவர்களை பிடிக்க 4 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என சீனியர் போலீஸ் சூப்பிரெண்டு சங்கல்ப் சர்மா தெரிவித்தார்.
அங்கன்வாடி ஊழியருக்கு நடந்த இந்த கொடுமை அப்பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.