செய்திகள்
ஜிஎஸ்டி

செல்போன்களுக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி- மத்திய அரசு முடிவு

Published On 2020-03-12 09:18 GMT   |   Update On 2020-03-12 09:18 GMT
மத்திய அரசின் வருவாயை அதிகரிக்க செய்யும் வகையில் செல்போன்களுக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி வரியை உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

  • மத்திய அரசின் வருவாயை அதிகரிக்க சில பொருட்களின் வரி விதிப்பை மாற்ற முடிவு
  • செருப்பு, ஜவுளி, உரம் தொடர்பான பொருட்களுக்கும் ஜி.எஸ்.டி. வரி அதிகரிக்கப்பட உள்ளது
  • செல்போன்களுக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி வரியை உயர்த்த மத்திய அரசு முடிவு


புதுடெல்லி:

சரக்கு மற்றும் சேவை வரியான ஜி.எஸ்.டி. வரி சதவீதத்தை மாற்றுவது தொடர்பாக மத்திய அரசு அடிக்கடி ஆலோசனை கூட்டங்களை நடத்துவதை வழக்கத்தில் வைத்துள்ளது.

நாளை மறுநாள் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் மத்திய அரசின் வருவாயை அதிகரிக்க செய்யும் வகையில் சில பொருட்களின் வரி விதிப்பை மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.



செல்போன்களுக்கு தற்போது 12 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது. இந்த வரி விதிப்பை 18 சதவீதமாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.

அதுபோன்று செருப்பு, ஜவுளி, உரம் தொடர்பான பொருட்களுக்கும் ஜி.எஸ்.டி. வரி அதிகரிக்கப்பட உள்ளது. ஜி.எஸ்.டி. வரி கணக்கு தாக்கலை எளிமைப்படுத்துவதற்கும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பான அறிவிப்புகளும் நாளை மறுநாள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News