search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "GST"

    • பெண்கள் இறுதிப்போட்டியில் தெற்கு ரெயில்வே 3-2 என்ற கணக்கில் ஐ.சி.எப். அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் பெற்றது.
    • 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் எஸ்.ஆர்.எம். அணி 2-0 என்ற கணக்கில் தமிழ்நாடு போலீசை தோற்கடித்தது.

    சென்னை:

    நெல்லை நண்பர்கள் கைப்பந்து கிளப், டாக்டர் சிவந்தி கிளப் சார்பில் பி.ஜான் மற்றும் ஏ.கே.சித்திரை பாண்டியன் நினைவு மாநில அளவிலான கைப்பந்து போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.

    பெண்கள் இறுதிப்போட்டியில் தெற்கு ரெயில்வே 3-2 என்ற கணக்கில் ஐ.சி.எப். அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் பெற்றது. 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் எஸ்.ஆர்.எம். அணி 2-0 என்ற கணக்கில் தமிழ்நாடு போலீசை தோற்கடித்தது.

    பரிசளிப்பு விழாவில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலாளர் ஜெ. மேகநாத ரெட்டி, தமிழ்நாடு கைப்பந்து சங்க ஆயுட்கால தலைவர் ஆர்.அர்ஜூன் துரை, தமிழ்நாடு தடகள சங்கத் தலைவர் டபிள்யூ. ஐ.தேவாரம் ஆகியோர் பங்கேற்றனர். சாம்பியன் பட்டம் வென்ற அணிக்கு 2 குரோ எச்.ஆர். கோப்பையுடன் ரூ.50 ஆயிரமும், 2-வது இடம் பிடித்த அணிக்கு ரோமா கோப்பையுடன் ரூ.40 ஆயிரமும், 3-வது இடம் பெற்ற அணிக்கு டாக்டர் போஸ் நினைவு கோப்பையுடன் ரூ.30 ஆயிரமும், 4-வது இடம் பெற்ற அணிக்கு ரூ.20 ஆயிரமும் பரிசாக வழங்கப்பட்டது.

    டாக்டர் ஜி.டி.போஸ் நினைவு ஆஸ்பத்திரி நிர்வாக இயக்குனர் டாக்டர் அஜித் போஸ், ஷீபா அஜித் போஸ், வேளாங்கண்ணி கல்வி குழும செயலாளர் டாக்டர் தேவ் ஆனந்த், போட்டி அமைப்பு குழு நிர்வாகிகள் பி.ஜெகதீசன், ஏ.தினகர், சி.ஸ்ரீகேசவன், ஏ.பாக்யராஜ் உள்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

    இன்று மாலை 5 மணிக்கு நடைபெறும் ஆண்கள் பிரிவு இறுதிப்போட்டியில் ஜி.எஸ்.டி.-ஐ.ஓ.பி. அணிகள் மோதுகின்றன. 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் வருமான வரி-டி.ஜி.வைஷ்ணவா அணிகள் மோதுகின்றன.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தில் விவசாயிகளின் ரூ.70,000 கோடி கடன்களை தள்ளுபடி செய்தோம்
    • இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால், விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்.

    மகாராஷ்டிராவின் நாசிக் மாவட்டத்தில் நடைபெற்ற ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை நீதி பயணத்தில் சரத் பவார், சிவசேனா எம்பி சஞ்சய் ராவத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    அப்போது பேசிய ராகுல்காந்தி, "மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தில் விவசாயிகளின் ரூ.70,000 கோடி கடன்களை தள்ளுபடி செய்தோம். ஆனால் விவசாயிகளின் கடனை பாஜக ஒருபோதும் தள்ளுபடி செய்யவில்லை. பாஜக அரசு ஒரு சில பணக்காரர்களின் ரூ.16 லட்சம் கோடி கடன்களை தள்ளுபடி செய்துள்ளது. பாஜக அரசால் பணக்காரர்களின் கடன்களை தள்ளுபடி செய்ய முடியுமானால், விவசாயிகள், தொழிலாளர்கள், சிறு வணிகர்களின் கடன்களை ஏன் தள்ளுபடி செய்ய முடியவில்லை.

    விவசாயிகள் தற்போது டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர், ஆனால் விவசாயிகளின் குறைகளை தீர்க்க பாஜக அரசுக்கு நேரமில்லை. இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால், விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை வழங்க பாஜக அரசு தவறி விட்டது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்குவோம்.

    அதானி 18 சதவீத ஜி.எஸ்.டி செலுத்துகிறார். அதே சமயம் விவசாயிகள் கூட ஜி.எஸ்.டி செலுத்துகின்றனர். ஜி.எஸ்.டி மட்டுமில்லாமல், விவசாயிகள் பல்வேறு வகையான வரிகளால் சிரமப்படுகின்றனர். இது விவசாயிகளின் வருமானத்தை கணிசமாக குறைக்கிறது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால், விவசாயிகள் ஏதேனும் ஒரு வரி மட்டும் செலுத்துவதை உறுதிசெய்வோம். மேலும், ஜிஎஸ்டி வரி வரம்பிலிருந்து விவசாயிகளுக்கு விலக்கு அளிக்க முயற்சிப்போம்" என்று அவர் தெரிவித்தார்.

    • பிப்ரவரி மாதத்திற்கான ஜி.எஸ்.டி. வசூல் 12.5 சதவீதம் அதிகரித்துள்ளது.
    • நடப்பு நிதியாண்டில் மொத்த ஜி.எஸ்.டி. வசூல் ரூ.18.40 லட்சம் கோடியாக உள்ளது.

    புதுடெல்லி:

    மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

    2024-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் மொத்தம் ரூ.1,68,337 கோடி சரக்கு மற்றும் சேவை வரி சேகரிக்கப்பட்டுள்ளது. இது 2023-ம் ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடும்போது 12.5 சதவீதம் அதிகம். இதற்கு உள்நாட்டு பரிவர்த்தனை பெருமளவு ஊக்கமளித்துள்ளது என தெரிவித்துள்ளது.

    நடப்பு நிதியாண்டில் (ஏப்ரல் 2023 முதல் பிப்ரவரி 2024 வரை) மொத்த ஜி.எஸ்.டி. வசூல் ரூ.18.40 லட்சம் கோடியாக உள்ளது. இது கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தின் வசூலை விட 11.7 சதவீதம் அதிகமாகும்.

    அதேபோல், நடப்பு நிதியாண்டின் சராசரி மாத மொத்த வசூல் ரூ.1.67 லட்சம் கோடியாக உள்ளது. இது கடந்த நிதியாண்டில் ரூ.1.50 லட்சம் கோடியாக இருந்தது.

    உள்நாட்டு பரிவர்த்தனைகளில் ஜி.எஸ்.டி. 13.9 சதவீதம் அதிகரிப்பு மற்றும் இறக்குமதிக்கான ஜி.எஸ்.டி.யில் 8.5 சதவீதம் அதிகரிப்பு ஆகியவற்றின் காரணமாக ஜி.எஸ்.டி. வரி வசூல் உயர்ந்துள்ளது எனவும் மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    • போலி பில் பட்டியல் தயாரித்து வணிகம் செய்வோர்கள் மீது உரிய நடவடுக்கை.
    • அனைத்து இணை ஆணையர்களும் வரி வருவாயை பெருக்க உரிய முறையில் செயலாற்ற வேண்டும்.

    அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தும் வகையில் போலி பில் பட்டியல் தயாரித்து வணிகம் செய்வோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி அறிவுறுத்தியுள்ளார்.

    மேலும், இதில் தொடர்ந்து முறைகேட்டில் ஈடுபடுவோரை கண்காணித்து, அவர்களின் ஜிஎஸ்டி பதிவை முடக்கவும் அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

    இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் திரு. பி மூர்த்தி அவர்கள் தலைமையில் இன்று (09.02.2024) சென்னை நந்தனம் ஒருங்கிணைந்த வணிகவரி வளாகக் கூட்டரங்கில் 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கான அனைத்து இணை ஆணையர்களின் பணித்திறன் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

    அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தும் வகையில் போலி பில் பட்டியல் தயாரித்து வணிகம் செய்வோர்கள் மீது உரிய நடவடுக்கை எடுக்கவும். தொடர்ந்து முறைகேட்டில் ஈடுபடுவோர் கண்காணிக்கப்பட்டு அவர்களின் ஜிஎஸ்டி பதிவு முடக்கம் செய்யவும் உத்தரவிட்டார்.

    அமைச்சர் அதிகாரிகளுக்கு மேலும், புதிதாக உருவாக்கப்பட்ட நிர்வாகக் கோட்டங்களின் மூலம் வரிவருவாய் அதிகரிக்க வேண்டும் என்பதை நினைவில் கொண்டு அனைத்து இணை ஆணையர்களும் வரி வருவாயை பெருக்க உரிய முறையில் செயலாற்றவும், அனைத்து நிறுவனங்களிலும் கூடுதல் கவனம் செலுத்தி இணை ஆணையர்கள் உரிய நடவடிக்கை எடுத்து அரசு நிர்ணயித்த வருவாய் இலக்கினை அடையவேண்டும் என அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • நீட் விலக்கு விவகாரம், வெள்ள நிவாரண நிதி, மதுரை எய்ம்ஸ், சென்னை 2-ம் கட்ட மெட்ரோ பணிகள், சேது சமுத்திர திட்டம் உள்ளிட்டவற்றை சுட்டிக்காட்டி பேசினார்.
    • சென்னை 2-ம் கட்ட மெட்ரோ திட்டத்துக்கு மத்திய அரசு உதவவில்லை என குறை கூறினார்.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற மக்களவையில் நேற்று நடைபெற்ற ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பாராளுமன்ற தி.மு.க. குழு தலைவர் டி.ஆர்.பாலுவும் பங்கேற்று பேசினார். அப்போது தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு பாராமுகம் காட்டுவதாக பல விஷயங்களை குறிப்பிட்டார். குறிப்பாக நீட் விலக்கு விவகாரம், வெள்ள நிவாரண நிதி, மதுரை எய்ம்ஸ், சென்னை 2-ம் கட்ட மெட்ரோ பணிகள், சேது சமுத்திர திட்டம் உள்ளிட்டவற்றை சுட்டிக்காட்டி பேசினார்.

    தமிழகத்தில் புயல் மற்றும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய மந்திரிகள், அதிகாரிகள் குழு பார்வையிட்டதையும், ஏற்பட்ட சேதங்களுக்கு ரூ.37 ஆயிரம் கோடி கேட்டு முதலமைச்சர், பிரதமர் மோடியை சந்தித்து வலியுறுத்தியதையும், அனைத்துக்கட்சி எம்.பி.க்கள் உள்துறை மந்திரியிடம் நேரில் வற்புறுத்தியதையும் குறிப்பிட்ட டி.ஆர்.பாலு, இதுவரை ஒரு பைசா கூட வரவில்லை எனக்கூறி ஆதங்கப்பட்டார்.

    மேலும் குடியுரிமை திருத்த சட்டத்தில் முஸ்லிம்கள், இலங்கை தமிழர்கள் சேர்க்கப்படாததை சுட்டிக்காட்டிய அவர், மேற்கு வங்காளம் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் அவற்றை ஏற்கவில்லை என்பதையும் தெளிவுபடுத்தினார். 2014-ம் ஆண்டு ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்படும் என பிரதமர் மோடி தெரிவித்ததாக கூறி குறிப்பிட்ட அவர், அப்படியெனில் இதுவரை 20 கோடி வேலைவாய்ப்புகள் கொடுக்கப்பட்டு இருக்கிறதா? என கேள்வி எழுப்பினார்.

    இதுபோல ஜி.எஸ்.டி. திட்டத்தின் குறைகளை எடுத்துரைத்தார். சென்னை 2-ம் கட்ட மெட்ரோ திட்டத்துக்கு மத்திய அரசு உதவவில்லை என குறை கூறினார். தொழிலாளர் வருங்கால வைப்புநிதி ஓய்வூதியத்தை குறைந்தபட்சம் ரூ.3 ஆயிரமாக உயர்த்த கோரிக்கை விடுத்தார். இறுதியாக மாநில அரசுகளில் கவர்னர்களின் தலையீடு விவகாரத்தையும் குறிப்பிட்டார்.

    • கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ஒரு லட்சத்து 55 ஆயிரத்து 922 கோடி ரூபாய் வசூலாகியிருந்தது.
    • 2023 ஏப்ரல்- 2024 ஜனவரி வரை 16.69 லட்சம் கோடி ரூபாய் வசூலியாகியுள்ளது.

    2024-ம் ஆண்டின் முதல் மாதமான ஜனவரி மாதத்தில் மொத்த ஜிஎஸ்டி வரி வசூல் ஒரு லட்சத்து 72 ஆயிரத்து 219 கோடி ரூபாய் என மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

    இது கடந்த ஆண்டு (2023) ஜனவரி மாதத்தைவிட 10.4 சதவீதம் அதிகமாகும். கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ஒரு லட்சத்து 55 ஆயிரத்து 922 கோடி ரூபாய் வசூலாகியிருந்தது.

    ஜனவரி மாத வரி வசூல் இதுவரை வசூலான மாத வரி வசூலில் 2-வது மிகப்பெரிய தொகையாகும். மேலும், இந்த நிதியாண்டில் (2023-2024) 3-வது முறையாக 1.70 லட்சம் கோடி ரூபாயை தாண்டியுள்ளது.

    2022 ஏப்ரல்- 2023 ஜனவரி வரையில் 14.96 லட்சம் கோடி ரூபாய் வசூல் ஆகியிருந்தது. தற்போது 2023 ஏப்ரல்- 2024 ஜனவரி வரை 16.69 லட்சம் கோடி ரூபாய் வசூலியாகியுள்ளது. இது கடந்த நிதியாண்டில் இதே காலத்தில் 11.6 சதவீதம் அதிகமாகும்.

    ஐஜிஎஸ்டி வரி வசூல் மூலம் மத்திய அரசுக்கு 43 ஆயிரத்து 552 ரூபாய் கோடியும், மாநிலங்களுக்கு 37 ஆயிரத்து 257 கோடி ரூபாயும் கிடைத்துள்ளது எனவும் தெரிவித்துள்ளது.

    • ஜி.எஸ்.டி. வருவாய் தொடா்பான விவரங்களை மத்திய நிதியமைச்சகம் வெளியீடு.
    • மொத்த ஜிஎஸ்டி வசூல் 7-வது முறையாக ரூ.1.60 லட்சம் கோடியைக் கடந்துள்ளது.

    இந்தியாவில் கடந்த 2017ம் ஆண்டு ஜூலை 1 முதல் ஜி.எஸ்.டி. என்னும் சரக்கு, சேவை வரி விதிப்பு முறை அமலில் உள்ளது.

    இந்நிலையில், டிசம்பர் மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.64 லட்சம் கோடியை எட்டியுள்ளதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    டிசம்பர் மாத ஜி.எஸ்.டி. வருவாய் தொடா்பான விவரங்களை மத்திய நிதியமைச்சகம் நேற்று வெளியிட்டது.

    கடந்த டிசம்பர் மாதத்தில், ரூ.1 லட்சத்து 64 ஆயிரத்து 882 கோடி ஜி.எஸ்.டி. வசூல் ஆகி இருப்பதாக மத்திய நிதி அமைச்சகம் கூறியுள்ளது.

    கடந்த 2022ம் ஆண்டு இதே டிசம்பர் மாதத்தில் ரூ.1 லட்சத்து 49 ஆயிரத்து 507 கோடி மட்டுமே வசூலாகி இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில், இது 10 சதவீதம் அதிகம் ஆகும்.

    கடந்த நவம்பர் மாதம் வசூலான ரூ.1 லட்சத்து 68 லட்சம் கோடியுடன் ஒப்பிடுகையில், டிசம்பர் மாத வசூல் குறைவு ஆகும்.

    2023-24-ம் நிதியாண்டில் மொத்த ஜிஎஸ்டி வசூல் 7-வது முறையாக ரூ.1.60 லட்சம் கோடியைக் கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • ஜி.எஸ்.டி. தொகையை விடுவிப்பதற்கு பொது கணக்காயரின் சான்றிதழ் கட்டாயம்.
    • 2022-2023 நிதியாண்டுக்கான பொது கணக்காயர் சான்றிதழை கர்நாடகாவை தவிர, எந்த மாநிலமும் அனுப்பவில்லை.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற மாநிலங்களவையில், கேள்வி நேரத்தின்போது, மேற்கு வங்காளத்துக்கு ஜி.எஸ்.டி. பாக்கி வைத்திருப்பது ஏன்? என்று திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சாகேத் கோகலே துணை கேள்வி எழுப்பினார்.

    அதற்கு மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறியதாவது:-

    எந்த மாநிலத்துக்கும் ஜி.எஸ்.டி. பாக்கி நிலுவையில் இல்லை. ஜி.எஸ்.டி. தொகையை விடுவிப்பதற்கு பொது கணக்காயரின் சான்றிதழ் கட்டாயம். அந்த சான்றிதழ் இல்லாவிட்டால், நாங்கள் தொகையை விடுவிக்க முடியாது.

    எனவே, மத்திய அரசு தரப்பில் ஜி.எஸ்.டி. பாக்கி நிலுவையில் இருப்பதாக கூறுவது சரியல்ல. அது தவறான வார்த்தை.

    எந்தெந்த மாநிலங்கள் பொது கணக்காயர் சான்றிதழை அனுப்பவில்லை என்று பெயர் குறிப்பிட்டே சொல்கிறேன். அப்போதுதான் மக்கள் மனதில் சந்தேகம் எழாது.

    மேற்கு வங்காளம் 2019-2020 நிதியாண்டுக்கான சான்றிதழ் முதல், 2022-2023 நிதியாண்டின் முதல் காலாண்டு வரை சான்றிதழ் அனுப்பவில்லை. அதனால், மேற்கு வங்காளத்துக்கு பாக்கித்தொகை விடுவிக்கப்படவில்லை. முதலில், சான்றிதழ் அனுப்பட்டும். பிறகு நாங்கள் விடுவிக்கிறோம்.

    கேரள மாநிலம், சான்றிதழ் அனுப்பி வைத்தபோதிலும், புள்ளிவிவரங்களை சரிபார்க்கும் வரை தொகையை விடுவிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டது. எனவே, மத்திய அரசு தரப்பில் நிலுவை வைக்கவில்லை.

    2022-2023 நிதியாண்டுக்கான பொது கணக்காயர் சான்றிதழை கர்நாடகாவை தவிர, எந்த மாநிலமும் அனுப்பவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ''கைது செய்யும் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, வியாபாரிகளிடம் ஜி.எஸ்.டி. அதிகாரிகள் வரம்புமீறி நடந்து கொண்டால், மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும்'' என்றும் நிர்மலா சீதாராமன் கூறினார்.

    மக்களவையில், நடப்பு நிதியாண்டில், ரூ.1 லட்சத்து 29 ஆயிரம் கோடி கூடுதல் செலவினங்களுக்கு ஒப்புதல் கோரும் துணை மானிய கோரிக்கை மீது விவாதம் நடந்தது. அதற்கு பதில் அளித்து நிர்மலா சீதாராமன் கூறியதாவது:-

    நமது பொருளாதாரம் சரியான திசையில் சென்று கொண்டிருக்கிறது. நடப்பு நிதியாண்டின் 2-வது காலாண்டில் ஏற்பட்ட 7.6 சதவீத வளர்ச்சி, உலகிலேயே அதிகம். பொருளாதாரத்தில் வேகமாக வளரும் நாடாக உயர்ந்துள்ளோம்.

    பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் தற்போதைய நிலைக்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் 10 ஆண்டு ஆட்சியே காரணம். அந்நிறுவனத்துக்கு ரூ.11 ஆயிரத்து 850 கோடி ஒதுக்கி இருக்கிறோம்.

    100 நாள் வேலை திட்டத்துக்கு நடப்பு நிதியாண்டில் இதுவரை ரூ.80 ஆயிரம் கோடி ஒதுக்கி உள்ளோம்.

    வெங்காயம் பிரச்சினையை பொறுத்தவரை, விவசாயிகள் மற்றும் நுகர்வோரின் நலன்களை சீர்தூக்கி செயல்பட்டு வருகிறோம். வெங்காயம் வரத்து குறைவாக இருப்பதால், நுகர்வோரின் நலன்களுக்கு முன்னுரிமை அளிப்பதற்காக, வெங்காயம் ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர், துணை மானிய கோரிக்கை நிறைவேறியது.

    • கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் ரூ.1 லட்சத்து 45 ஆயிரம் கோடி மட்டுமே வசூலாகி இருந்தது.
    • 2023-24-ம் நிதியாண்டில் மொத்த ஜிஎஸ்டி வசூல் 6-வது முறையாக ரூ.1.60 லட்சம் கோடியை கடந்துள்ளது.

    புதுடெல்லி:

    இந்தியாவில் கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை 1 முதல் ஜி.எஸ்.டி. என்னும் சரக்கு, சேவை வரி விதிப்பு முறை அமலில் உள்ளது.

    இந்நிலையில், நவம்பர் மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.68 லட்சம் கோடியை எட்டியுள்ளதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    நவம்பர் மாத ஜி.எஸ்.டி. வருவாய் தொடா்பான விவரங்களை மத்திய நிதியமைச்சகம் நேற்று வெளியிட்டது.

    கடந்த நவம்பர் மாதத்தில், ரூ.1 லட்சத்து 67 ஆயிரத்து 929 கோடி ஜி.எஸ்.டி. வசூல் ஆகி இருப்பதாக மத்திய நிதி அமைச்சகம் கூறியுள்ளது.

    கடந்த ஆண்டு இதே நவம்பர் மாதத்தில் ரூ.1 லட்சத்து 45 ஆயிரம் கோடி மட்டுமே வசூலாகி இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில், இது 15 சதவீதம் அதிகம் ஆகும்.

    கடந்த அக்டோபர் மாதம் வசூலான ரூ.1 லட்சத்து 72 ஆயிரம் கோடியுடன் ஒப்பிடுகையில், நவம்பர் மாத வசூல் குறைவு ஆகும்.

    2023-24-ம் நிதியாண்டில் மொத்த ஜிஎஸ்டி வசூல் 6-வது முறையாக ரூ.1.60 லட்சம் கோடியைக் கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • அக்டோபர் மாதத்தில் ஜி.எஸ்.டி வருவாய் ரூ.1,72,003 கோடியாக அதிகரித்துள்ளது.
    • கடந்த ஏப்ரல் மாதத்தில் 1.87 லட்சம் கோடி ரூபாய் வசூலானது என்பது குறிப்பிடத்தக்கது.

    புதுடெல்லி:

    இந்தியாவில் 2017-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி முதல் ஜி.எஸ்.டி. என்னும் சரக்கு, சேவை வரி விதிப்பு முறை அமலில் உள்ளது.

    இந்நிலையில், அக்டோபர் மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.72 லட்சம் கோடியை எட்டியுள்ளதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    நாடுமுழுவதும் ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டு 6 ஆண்டு கடந்துள்ள நிலையில், அக்டோபர் மாத ஜி.எஸ்.டி. வருவாய் தொடா்பான விவரங்களை மத்திய நிதியமைச்சகம் இன்று வெளியிட்டது.

    அதன்படி, மொத்தமாக ரூ.1,72,003 லட்சம் கோடி ஜி.எஸ்.டி. வருவாய் கிடைத்துள்ளது. அதில் மத்திய சரக்கு சேவை வரியாக (சிஜிஎஸ்டி) ரூ.30,062 கோடியும், மாநில சரக்கு சேவை வரியாக (எஸ்ஜிஎஸ்டி) ரூ.38,171 கோடியும், ஒருங்கிணைந்த சரக்கு சேவை வரியாக (ஐஜிஎஸ்டி) ரூ.91,315 கோடியும் வசூலாகியுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

    அக்டோபர் மாத வசூல், ஜிஎஸ்டி வசூலில் இரண்டாவது அதிகபட்ச வசூல் இதுவாகும்.

    கடந்த ஏப்ரல் மாதத்தில் 1.87 லட்சம் கோடி ரூபாய் வசூலானது என்பது குறிப்பிடத்தக்கது.

    • கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை சட்டமாக்கும் வகையில் கடந்த மாதம் மத்திய மற்றும் ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி. திருத்தச் சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேறியது.
    • ஆறு மாதங்களுக்குப் பிறகு (2024, ஏப்ரல்) மதிப்பாய்வு செய்யப்படும் என்றும் மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    புதுடெல்லி:

    கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் நடை பெற்ற ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில், மத்திய நிதி அமைச்சா் மற்றும் பல்வேறு மாநிலங்களின் நிதியமைச்சா்களின் ஒப்புதலோடு இணையவழி விளையாட்டுகள், சூதாட்ட விடுதிகள், குதிரைப் பந்தயம் உள்ளிட்டவற்றில் கட்டப்படும் முழு பந்தயத் தொகை மீது 28 சதவீத ஜி.எஸ்.டி. வரி விதிக்கும் திருத்தச் சட்டத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

    அதைத் தொடா்ந்து, கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை சட்டமாக்கும் வகையில் கடந்த மாதம் மத்திய மற்றும் ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி. திருத்தச் சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேறியது. இதன்மூலம் ஏற்கனவே 28 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி வசூல் செய்யப்படும் லாட்டரி, சூதாட்டங்களுடன் இணையழி விளையாட்டுகள், குதிரைப்பந்தயம், சூதாட்ட விடுதிகள் ஆகியவையும் சோ்க்கப்பட்டன.

    மேலும் ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி.யில் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தின்படி வெளிநாடுகளில் இருந்து இணையம் மூலம் நடத்தப்படும் இணையவழி விளையாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் பதிவு செய்து உள்நாட்டு சட்டங்களில் குறிப்பிட்டுள்ள வரியைச் செலுத்த வேண்டும். இந்தச் சட்டம் இன்று முதல் (1-ந் தேதி) அமலுக்கு வரவுள்ளது என்றும், இச்சட்டத்தின் செயல்பாடுகள் குறித்து ஆறு மாதங்களுக்குப் பிறகு (2024, ஏப்ரல்) மதிப் பாய்வு செய்யப்படும் என்றும் மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    • டீசல் வாகனங்களுக்கு கூடுதலாக 10 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
    • மத்திய சாலை போக்குவரத்து துறை மந்திரி நிதின் கட்காரி பரிந்துரை செய்துள்ளார்.

    புதுடெல்லி:

    இந்தியாவில் டீசல் வாகனங்களின் பயன்பாட்டை குறைக்கும் வகையில் இந்த வாகனங்களுக்கு கூடுதலாக 10 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது. இதற்கு மத்திய சாலை போக்குவரத்து துறை மந்திரி நிதின் கட்காரி பரிந்துரை செய்துள்ளதாகவும் கூறப்பட்டது.

    இந்நிலையில், மாசு வரி என்ற பெயரில் டீசல் வாகனங்களுக்கு கூடுதல் ஜி.எஸ்.டி. வரி விதிக்க மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளதாக வெளியான தகவல்களில் உண்மை இல்லை என்று மத்திய மந்திரி நிதின் கட்காரி விளக்கம் அளித்துள்ளார்.

    ×