செய்திகள்
ராகுல் காந்திக்கு கொரோனா வைரஸ் சோதனை நடத்தப்பட்டதா?: பாஜக எம்.பி. கேள்வி
ராகுல் காந்தி, கொரோனா வைரஸ் பாதிப்பு நிறைந்த இத்தாலிக்கு போய்விட்டு வந்துள்ளார். அவருக்கு விமான நிலையத்தில் கொரோனா வைரஸ் பரிசோதனை நடத்தப்பட்டதா என்று பா.ஜனதா எம்.பி. ரமேஷ் பிதுரி கேள்வி எழுப்பியுள்ளார்.
புதுடெல்லி :
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று டெல்லியில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று மக்களை சந்தித்தார். இதுகுறித்து தெற்கு டெல்லி தொகுதி பா.ஜனதா எம்.பி. ரமேஷ் பிதுரி, நாடாளுமன்ற வளாகத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
ராகுல் காந்தி, கொரோனா வைரஸ் பாதிப்பு நிறைந்த இத்தாலிக்கு போய்விட்டு வந்துள்ளார். அவருக்கு விமான நிலையத்தில் கொரோனா வைரஸ் பரிசோதனை நடத்தப்பட்டதா என்று தெரியவில்லை. அதை அவர்தான்சொல்ல வேண்டும்.
அவர் மக்களை சந்திப்பதற்கு முன்பு, தன்னை முழுமையான மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி இருக்க வேண்டும். ஏனென்றால் மக்களின் பாதுகாப்பு முக்கியமானது.
இவ்வாறு அவர் கூறினார்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று டெல்லியில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று மக்களை சந்தித்தார். இதுகுறித்து தெற்கு டெல்லி தொகுதி பா.ஜனதா எம்.பி. ரமேஷ் பிதுரி, நாடாளுமன்ற வளாகத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
ராகுல் காந்தி, கொரோனா வைரஸ் பாதிப்பு நிறைந்த இத்தாலிக்கு போய்விட்டு வந்துள்ளார். அவருக்கு விமான நிலையத்தில் கொரோனா வைரஸ் பரிசோதனை நடத்தப்பட்டதா என்று தெரியவில்லை. அதை அவர்தான்சொல்ல வேண்டும்.
அவர் மக்களை சந்திப்பதற்கு முன்பு, தன்னை முழுமையான மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி இருக்க வேண்டும். ஏனென்றால் மக்களின் பாதுகாப்பு முக்கியமானது.
இவ்வாறு அவர் கூறினார்.