செய்திகள்
தற்கொலை

சித்தூர் அருகே திருமணத்துக்கு பிறகும் காதலன் தொல்லை- புதுப்பெண் தற்கொலை

Published On 2019-12-23 07:15 GMT   |   Update On 2019-12-23 07:15 GMT
திருமணத்துக்கு பிறகும் காதலன் தொல்லை கொடுத்ததால் புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருப்பதி:

சித்தூர் அடுத்த கொத்தபவல்லி ஈஸ்வரம்மா காலனியை சேர்ந்தவர் ரியாஸ்கான். இவரது மகள் பாமிதா (வயது 19). பாமிதாவும், மதனபள்ளி சைதாப்பேட்டை காலனியை சேர்ந்த ஷாகிர் என்பவரும் காதலித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் கொத்தபல்லியை சேர்ந்த பாலாஜான் (21) என்பவருடன் பாமிதாவுக்கு கடந்த 2 மாதத்துக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணம் நடந்தது முதல் ஷாகிர், பாமிதாவுக்கு செல்போன் மூலம் வீட்டில் தனியாக சந்திக்க வேண்டுமென தொல்லை கொடுத்துள்ளார்.

இதனால் மன வேதனையில் இருந்த பாமிதா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து மதனபல்லி போலீசாருக்கு குடும்பத்தினர் தகவல் கொடுத்தனர். சப்-இன்ஸ்பெக்டர் திலீப் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பாமிதா பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதனபல்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பாமிதாவின் தந்தை ரியாஸ்கான் போலீசில் கொடுத்த புகாரில் மதனபள்ளியை சேர்ந்த ஷாகிர், என் மகளுக்கு செல்போனில் தொல்லை கொடுத்ததால் மன உளைச்சலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக புகாரில் கூறியிருந்தார்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள ஷாகிரை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News