செய்திகள்
கோப்பு படம்.

சியாச்சின் மலைப்பகுதியில் ராணுவ வீரர்கள் முகாம் அருகே திடீர் பனிச்சரிவு

Published On 2019-11-18 14:59 GMT   |   Update On 2019-11-18 14:59 GMT
சியாச்சின் மலைப்பகுதியில் ராணுவ வீரர்கள் முகாம் அருகே திடீர் பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது.
ஸ்ரீநகர்:

உலகின் உயரமான போர்க்களம் என்று சியாச்சின் பகுதி வர்ணிக்கப்படுகிறது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 19 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள இந்த பனி படர்ந்த மலைப்பகுதி, ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் அமைந்துள்ளது.

இந்த நிலையில், சியாச்சின் ராணுவ வீரர்கள் முகாம் அருகே திடீர் பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது. பிற்பகல் 3.30 மணியளவில் பனிச்சரிவு ஏற்பட்டதாகவும், இதில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த 8 வீரர்கள் வரை சிக்கியிருக்கலாம் என்று ராணுவ வட்டார தகவல்கள் கூறுகின்றன. பனிச்சரிவில் சிக்கிய வீரர்களை மீட்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
Tags:    

Similar News