என் மலர்
நீங்கள் தேடியது "India Pakistan Border"
- தண்ணீர் இல்லாமல் நாக்கு வறண்டு உயிரிழந்திருக்கலாம் எனச் சந்தேகம்.
- புதிதாக திருமணம் செய்து இந்தியாவில் வாழ்க்கை நடத்த முடிவு செய்து எல்லை கடந்திருக்க வாய்ப்பு.
பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் நுழைந்த பாகிஸ்தானைச் சேர்ந்த இளம் ஜோடி, தண்ணீர் இன்றி நாக்கு வறண்டு உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் சர்வதேச எல்லையில் இருந்து 11 கி.மீ. தூரத்திற்கு முன்பாக இருவருடைய உடல்களும் கிடந்துள்ளது. ஆடு, மாடு மேய்க்கும் நபர்கள் இது தொடர்பாக எல்லை பாதுகாப்புப்படை வீரர்களுக்கு தகவல் தெரிவிக்க, அவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்துள்ளனர்.
அப்போது இறந்து கிடந்தது ரவிக்குமார் (வயது 17), ஷாந்தி பாய் (வயது 15) எனத் தெரியவந்துள்ளது. அவர்கள் பாகிஸ்தானின் செல்போன் சிம்கார்டு வைத்துள்ளனர். இதன் மூலம் இருவரும் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் எனக் கண்டுபிடித்துள்ளனர்.
உடல் கிடந்த இடத்தில் வாட்டர் கேன் கிடந்துள்ளது. இதனால் தண்ணீர் முடிவடைந்து, நாக்கு வறண்டு நீர்ச்சத்து குறைவு ஏற்பட்டு உயிரிழந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கின்றனர். அந்த பெண் கையில் சிகப்பு, வெள்ளை வளையல்கள் கிடந்துள்ளது. திருமணம் முடிந்தவர்கள் இதுபோன்று வளையல்கள் அணிவார்கள் என்பதால், சமீபத்தில் திருமணம் ஆகியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
+2
- நபி நகர் பகுதியில் உள்ள ஒரு விவசாய நிலத்தில் இருந்து ட்ரோனை கைப்பற்றினர்.
- இந்த சம்பவத்தைத் தொடர்ந்து எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
சண்டிகர்:
பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் செக்டாரில் உள்ள, இந்தியா -பாகிஸ்தான் சர்வதேச எல்லையோர பகுதியில் இந்திய எல்லைப் பாதுகாப்பு படையினர் இன்று வழக்கமான பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பாகிஸ்தான் பகுதியில் இருந்து இந்திய எல்லை பகுதியை நோக்கி ஒரு ட்ரோன் பறந்து வந்ததை கவனித்தனர்.
உஷாரான எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள், அந்த ட்ரோனை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து ட்ரோன் பாகிஸ்தான் நோக்கி திரும்பிச் சென்றது. ஆனால் அதற்குள் ட்ரோன் விழுந்துவிட்டது. நபி நகர் பகுதியில் உள்ள ஒரு விவசாய நிலத்தில் இருந்து அந்த ட்ரோனை கைப்பற்றினர். 6 இறக்கைகளுடன் கூடிய அந்த ட்ரோனில் ஒரு ஏகே ரக துப்பாக்கி, 2 மேகசின்கள் மற்றும் 40 ரவுண்டு சுடக்கூடிய புல்லட்டுகள் இருந்தன. அவற்றை அதிகாரிகள் ஆய்வு செய்துவருகின்றனர்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
- எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் ஊடுருவ முயற்சி.
- துப்பாக்கிச்சண்டையில் ஏழு பேர் சுட்டு வீ்ழ்த்தப்பட்டனர்.
இந்தியா-பாகிஸ்தான் எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே இந்திய ராணுவ வீரர்கள் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். எல்லை கட்டுப்பாட்டு கோடு வழியாக பாகிஸ்தான் ஊடுருவல்காரர்கள் இந்தியாவுக்குள் நுழைந்து, இந்திய நிலைகள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக இந்திய ராணுவத்திற்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
அதன்படி கடந்த 4-5-ந்தேதிகளில் ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டம் கிருஷ்ணா காதி செக்டார் பகுதியில், எல்லை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் ராணுவத்தின் சிறப்புக்குழு தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது எல்லை வழியாக ஊடுருவ முயற்சிப்பதை கண்டறிந்தனர். அவர்களை இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்த முயற்சித்தனர்.
அப்போது இந்திய ராணுவத்தினருக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் இடையில் துப்பாக்கிச்சண்டை நடைபெற்றுள்ளது. இதில் ஏழு ஊடுருவலர்காரர்கள் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.
இதனால் பெரிய அசம்பாவிதம் தடுத்து நிறுத்தப்பட்டது. சுட்டு வீழ்த்தப்பட்ட ஏழு பேர்களில் 2 முதல் 3 பேர் பாகிஸ்தான் எல்லை ஆக்சன் குழுவை சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது.
ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத இயக்கத்தின் மிகப்பெரிய முகாமை இந்திய விமானப்படை குண்டு வீசி அழித்ததால் பாகிஸ்தான் கடும் ஆத்திரம் அடைந்துள்ளது. எல்லை தாண்டி வந்து தாக்குதல் நடத்திய இந்திய ராணுவத்துக்கு பதிலடி கொடுப்போம் என்றும் மிரட்டியது. அதன் பிறகு எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்திய ராணுவமும் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில் இன்று காலை இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் போர் விமானங்கள் நுழைந்து தாக்குதல் நடத்தியது. இதில் ஒரு விமானத்தை இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தியது. இதேபோல் பாகிஸ்தான் பகுதிக்குள் ஊடுருவிய 2 இந்திய போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் கூறியுள்ளது. இவ்வாறு விமானப்படை தாக்குதல் தொடங்கி உள்ளதால் இரு நாடுகளில் உள்ள பல்வேறு விமான நிலையங்கள் மூடப்பட்டு விமான சேவை நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், டெல்லியில் இன்று பிரதமர் மோடி தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்திய விமானப்படை தளபதி தனோவா, கடற்படை தளபதி சுனில் லம்பா உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். எல்லையில் தற்போது நிலவும் சூழல் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து பிரதமரிடம் அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.
இதற்கிடையே, இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் நீடிப்பதால் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்று மத்திய மந்திரி அருண் ஜெட்லி கூறியுள்ளார். பின்லேடன் விவகாரத்தில் அமெரிக்கா என்ன செய்ததோ அதேபோன்ற நடவடிக்கைக்கு இந்தியா தயாராக இருப்பதாகவும், பின்லேடனை பிடிப்பதற்காக பாகிஸ்தானுக்குள் அமெரிக்கா நுழைந்ததைப்போன்று நுழைய தயார் என்றும் ஜெட்லி கூறினார். #IndiaPakistanWar #PakistanArmy #IndianAirForce






