செய்திகள்
பிரதமர் மோடி

கடந்த 5 ஆண்டுகளில் ஐநா சபையில் இந்தியாவின் மதிப்பு உயர்ந்துள்ளது - பிரதமர் மோடி பெருமிதம்

Published On 2019-09-28 16:29 GMT   |   Update On 2019-09-28 16:29 GMT
டெல்லி திரும்பிய பிரதமர் மோடி பாஜக ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் பேசுகையில், கடந்த 5 ஆண்டுகளில் ஐநா சபையில் இந்தியாவின் மதிப்பு உயர்ந்துள்ளது என தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

அமெரிக்காவில் 7 நாட்கள் அரசுமுறை பயணத்தை முடித்துக்கொண்டு டெல்லி திரும்பிய பிரதமர் மோடிக்கு  டெல்லி பாலம் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.  

விமான நிலைய வளாகத்தில் பாஜக தொண்டர்கள் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

கடந்த 5 ஆண்டுகளில் ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியாவின் மதிப்பு உயர்ந்துள்ளது. ஐ.நா.வில் இந்தியா மீதான ஆர்வம் அதிகரித்துள்ளதற்கு 130 கோடி இந்தியர்களே காரணம். அவர்களுக்கு நான் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

ஹூஸ்டனில் ஹவுடி - மோடி நிகழ்ச்சியானது இந்தியா-அமெரிக்கா இடையேயான நல்லுறவை வெளிக்காட்டியது. இது மறக்கமுடியாத வரவேற்பு. இந்த சந்தர்ப்பத்தில் ஒவ்வொரு இந்தியருக்கும் நான் தலைவணங்குகிறேன் என பெருமிதத்துடன் தெரிவித்தார்.

டெல்லி திரும்பிய பிரதமர் மோடியை வரவேற்க ஏராளமான பாஜக தொண்டர்கள் 2 கி.மீ தூரம் வரை விமான நிலையத்தில் குவிந்தனர்.
Tags:    

Similar News