search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "UN"

    • சிஏஏ குறித்து ஐ.நா.வில் கேள்வி எழுப்பிய பாகிஸ்தானுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்தது.
    • இந்தியா தொடர்புடைய விஷயங்களில் பாகிஸ்தான் தவறான கண்ணோட்டத்தை கொண்டுள்ளது.

    புதுடெல்லி:

    ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை கூட்டத்தில் பாகிஸ்தான் தூதர் முனிர் அக்ரம் பேசுகையில், அயோத்தி ராமர் கோவில் மற்றும் குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து குறிப்பிட்டார்.

    இந்நிலையில், ஐ.நா.சபையில் சிஏஏ சட்டம் மற்றும் அயோத்தி ராமர் கோவில் குறித்து கேள்வி எழுப்பிய பாகிஸ்தானுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக ஐ.நா.விற்கான இந்தியாவின் நிரந்தரத் தூதர் ருசித்ரா கம்போஜ் கூறியதாவது:

    இந்த அவையில் பாகிஸ்தான் ஒரே விஷயத்தை திரும்பத் திரும்ப சொல்லி வருகிறது. உலகம் வளர்ந்து வருகிறது. இந்தியாவின் அண்டை நாடானது ஒரே இடத்தில் தேங்கி நிற்பதுடன், ஒரே விஷயத்தை திரும்பத் திரும்பச் சொல்லி வருகிறது.

    எனது நாட்டுடன் தொடர்புடைய விஷயங்களில், அந்நாட்டு குழுவினர் தவறான கண்ணோட்டத்தை காண்பது உண்மையில் துரதிர்ஷ்டவசமானது என தெரிவித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பாகிஸ்தானில் மனித உரிமைகள் சாதனை "உண்மையிலேயே பரிதாபத்திற்குரியது.
    • தனது சொந்த சிறுபான்மையினரை துன்புறுத்தி, உண்மையிலேயே மோசமான மனித உரிமை சாதனைகளைக் கொண்ட ஒரு நாடு.

    காஷ்மீர் விவகாரம் பற்றி பாகிஸ்தான் ஐ.நா.சபையில் அடிக்கடி பேசி இந்தியா மீது குற்றம் சாட்டி வருகிறது. இதற்கு இந்தியாவும் பதிலடி கொடுத்து வருகிறது.

    இந்த நிலையில் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் 55-வது அமர்வில், இந்தியாவின் செயலாளர் அனுபமா சிங் பேசியதாவது:-

    இந்தியாவைப் பற்றிய விரிவான பாகிஸ்தானின் குறிப்புகளைப் பொறுத்தவரை, சபையின் தளம் மீண்டும் இந்தியாவுக்கு எதிராக வெளிப்படையான பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைக்க தவறாகப் பயன்படுத்தப்படுவது மிகவும் துரதிர்ஷ்டவசமானது.

    நாங்கள் பதிலளிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய முழு யூனியன் பிரதேசங்களும் இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத பகுதி. ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் சமூக- பொருளாதார மேம்பாடு மற்றும் நல்லாட்சியை உறுதி செய்வதற்காக இந்திய அரசு எடுத்துள்ள அரசியலமைப்பு நடவடிக்கைகள் இந்தியாவின் உள் விவகாரங்கள்.

    இதில் பாகிஸ்தானுக்கு எந்த உரிமையும் இல்லை. பாகிஸ்தானில் மனித உரிமைகள் சாதனை "உண்மையிலேயே பரிதாபத்திற்குரியது. தனது சொந்த சிறுபான்மையினரை துன்புறுத்தி, உண்மையிலேயே மோசமான மனித உரிமை சாதனைகளைக் கொண்ட ஒரு நாடு, சாதிப்பதில் பெரும் முன்னேற்றங்களைச் செய்து வரும் இந்தியாவைப் பற்றி கருத்துத் தெரிவிப்பது, வெறும் முரண்பாடானவை அல்ல. மாறாக விபரீதமானவை.

    உலகம் முழுவதும் பயங்கரவாதத்தை பாகிஸ்தான் ஆதரித்து வருகிறது. பயங்கரவாதம், கடனில் சிக்கித் தவிக்கும் தேசிய இருப்புநிலைகள் மற்றும் தங்கள் நலன்களுக்கு சேவை செய்யத் தவறியதற்காக அதன் மக்கள் உணரும் அவமானம் ஆகியவற்றால் ரத்தம் சிந்தப்பட்ட ஒரு நாட்டிற்கு இந்தியா அதிக கவனம் செலுத்த முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வடக்கு காசா பகுதியில் இருந்து வெளியேற இஸ்ரேல் ராணுவம் எச்சரித்தது
    • பசியின் காரணமாக உணவு வாகனங்களை கும்பல்கள் தாக்கி களவாடுகின்றன

    கடந்த அக்டோபர் 7 அன்று தொடங்கிய இஸ்ரேல்-ஹமாஸ் போர் 130 நாட்களுக்கும் மேலாக தொடர்கிறது.

    பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் இஸ்ரேலிய ராணுவ படையினர் (Israeli Defence Forces) ஹமாஸ் (Hamas) அமைப்பினரை அழிக்க வான்வழியாகவும், தரை வழியாகவும் தாக்குதல் நடத்தி வருகிறது.

    மேலும், ஹமாஸ் அமைப்பினரின் வசம் உள்ள இஸ்ரேலிய பிணைக்கைதிகளை காசா பகுதி முழுவதும் அனைத்து இடங்களிலும் இஸ்ரேலிய ராணுவம் தேடி வருகின்றனர்.

    இஸ்ரேல் விடுத்த எச்சரிக்கையை அடுத்து வடக்கு காசாவில் இருந்து மக்களில் பலர் கூட்டம் கூட்டமாக தங்கள் வீடுகளை விட்டு வெளியேறுகின்றனர்.

    அங்கிருந்து செல்லாமல் தங்கிய மக்களுக்கு, ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவு திட்டம் (World Food Programme) எனும் சர்வதேச அமைப்பின் வழியாக உணவு வழங்கப்பட்டு வந்தது.

    கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று வடக்கு காசாவில் உணவுகளை வினியோகிக்க சென்ற இந்த அமைப்பினரின் வாகனங்களை பசி மற்றும் வறட்சி காரணமாக காசா மக்கள் சூழ்ந்து கொண்டு உணவு பண்டங்களை சூறையாடினர்.

    ஒரு சில இடங்களில் வாகன ஓட்டுனர்கள் தாக்கப்பட்ட சம்பவங்களும் நடந்தன.

    இந்நிலையில், அங்கு நிலவும் அசாதாரணமான சூழலால், உணவு வழங்குவதை உலக உணவு திட்ட அமைப்பினர் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர்.


    இது குறித்து உலக உணவு திட்ட அமைப்பு அறிவித்திருப்பதாவது:

    வடக்கு காசா பகுதியில் வன்முறையும், கட்டுப்பாடற்ற சூழலும் நிலவுகிறது. அங்கு சட்டம் ஒழுங்கற்ற நிலை உருவாகி விட்டது.

    உணவுக்காக கும்பல் கும்பலாக தாக்குதலில் ஈடுபடுகின்றனர். துப்பாக்கிச் சூடு மற்றும் உணவு களவாடப்படுதல் சம்பவங்கள் அதிகரித்து விட்டது.

    பாதுகாப்பற்ற சூழலில் உள்ள மக்கள் சிறிது சிறிதாக பசி மற்றும் நோய் தாக்குதல் ஆகியவற்றால் தீவிர துன்பத்தை அனுபவிக்கின்றனர்.

    உணவு வினியோகத்தில் ஈடுபடுபவர்களுக்கு பாதுகாப்பு கோரியுள்ளோம்.

    விரைவில் வினியோகம் மீண்டும் தொடங்கப்படும்.

    இவ்வாறு அந்த அமைப்பு அறிவித்துள்ளது.

    வடக்கு காசாவில் உணவு, குடிநீர், மருந்து ஆகிய அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் பஞ்சம் நிலவுகிறது.

    இஸ்ரேலின் தொடர் தாக்குதல்களினால் பாலஸ்தீனத்தில் இதுவரை 28 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

    • ஐ.நா.வின் பாலஸ்தீன அகதிகளுக்கான முகமை, காசாவில் மனிதநேய உதவிகளை செய்து வருகிறது.
    • 20 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தங்களது உயிர்வாழ்விற்காக சார்ந்து உள்ளனர்.

    வாஷிங்டன்:

    இஸ்ரேல் மீது கடந்த ஆண்டு அக்டோபர் 7-ந் தேதி ஹமாஸ் அமைப்பினர் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தினர்.

    இதில் 1200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் 250-க்கும் மேற்பட்டோரை பிணைக்கைதிகளாக பிடித்தனர்.

    இதையடுத்து ஹமாஸ் நிர்வகித்து வரும் காசா மீது இஸ்ரேல் போரை தொடங்கியது. இதில் 26 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர். மூன்று மாதங்களுக்கு மேலாக போர் நீடித்து கொண்டிருக்கிறது.

    இதற்கிடையே இஸ்ரேல் மீதான அக்டோபர் 7-ந்தேதி தாக்குதலில் ஐ.நா.வின் பாலஸ்தீன அகதிகள் முகமையை சேர்ந்த ஊழியர்கள் சிலருக்கு இதில் தொடர்பு இருப்பதாக இஸ்ரேல் குற்றச்சாட்டு தெரிவித்தது.

    ஐ.நா.வின் பாலஸ்தீன அகதிகளுக்கான முகமை, காசாவில மனிதநேய உதவிகளை செய்து வருகிறது. இதில் 13 ஆயிரம் பேர் பணியாற்றுகிறார்கள். இதில் பெரும்பாலானவர்கள் பாலஸ்தீனியர்கள். இந்த முகமை மீதான குற்றச்சாட்டையடுத்து சில ஊழியர்களை ஐ.நா. பணிநீக்கம் செய்தது.

    இந்நிலையில் ஐ.நா. வின் பாலஸ்தீன அகதிகள் முகமைக்கு நிதி உதவியை நிறுத்துவதாக அமெரிக்கா, இங்கிலாந்து அறிவித்தன. இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறும்போது, "இஸ்ரேலில் ஹமாஸ் நடத்திய தாக்குதலில் ஐ.நா.வின் பாலஸ்தீன அகதிகள் அமைப்பு ஊழியர்களுக்கு தொடர்பு இருப்பதாக கூறப் படும் குற்றச்சாட்டு அதிர்ச்சி அளிக்கிறது. அந்த அமைப்புக்கு நிதிஉதவி அளிப்பது நிறுத்தி வைக்கப்படுகிறது" என்று தெரிவித்தது. இதே கருத்தை இங்கிலாந்தும் தெரிவித்து உள்ளது.

    இதற்கிடையே ஐ.நா.வின் பாலஸ்தீன அகதிகள் முகமைக்கு நிதிஉதவியை நிறுத்துவதாக மேலும் 7 நாடுகள் அறிவித்தது. கனடா, ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, சுவிட்சர் லாந்து, பின்லாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளும் நிதிஉதவி அளிப்பதை நிறுத்துவதாக தெரிவித்துள்ளது. நிதிஉதவியை நிறுத்தியதற்கு பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. முகமை தலைவர் பிலிப் லாசரினி கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறும்போது, "நிதிஉதவியை நிறுத்துவதாக அறிவித்து இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இந்த அமைப்பு காசாவில் முதன்மையான மனிதாபிமான நிறுவனமாகும். அதில் 20 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தங்களது உயிர்வாழ்விற்காக சார்ந்து உள்ளனர். போருக்கு மத்தியில் இதுபோன்ற முடிவுகள் ஏற்கனவே தலைவிரித்தாடும் பஞ்சத்தை அதிகரிக்க செய்யும். காசாவில் உள்ள பாலஸ்தீனியர்களுக்கு மேலும் ஒரு கூட்டுத் தண்டனையை கொடுக்காதீர்கள்" என்றார்.

    • தாக்குதலை அதிகப்படுத்துவதுதான் பிணைக்கைதிகள் விடுவிப்பதற்கான வழி என இஸ்ரேல் நம்புகிறது.
    • நிரந்தர போர் நிறுத்தம் செய்யப்பட்டால்தான் பிணைக்கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என ஹமாஸ் எச்சரிக்கை.

    காசாவில் மனிதாபிமான நிலைமைகள் மிகவும் மோசமடைந்து வருகிறது என ஐ.நா. எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், மனிதாபிமான உதவிகள் பாலஸ்தீன மக்களுக்கு கிடைக்கும் வகையில் இஸ்ரேல் உடனடியாக போரை நிறுத்த வேண்டும் என ஐ.நா. வலியுறுத்தியுள்ளது.

    காசாவின் வடக்கு பகுதிகளை மட்டுமே தாக்கிவந்த இஸ்ரேல் ராணுவம் தெற்குப் பகுதி, மத்தியப் பகுதி என அனைத்தும் இடங்களிலும் தாக்குதலை விரிவுப்படுத்தியுள்ளது.

    காசாவில் மொத்தம் 2.3 மில்லியன் (23 லட்சம் மக்கள்) பாலஸ்தீனர்கள் வசித்து வருகிறார்கள். இவர்களில் 85 சதவீதம் பேர் வீட்டைவிட்டு வெளியேறி மருத்துவமனை, முகாம்களில் தங்கி வருகின்றனர். இவ்வாறு மருத்துவமனை, முகாம்களில் தங்கியிருக்கும் மக்களுக்கு போதுமான வகையில் உணவு அளிக்க முடியவில்லை என ஐ.நா. கவலை தெரிவித்துள்ளது.

    வடக்கு காசாவில் தாக்குதல் நடத்தியபோது, மக்கள் அனைவரும் தெற்குப் பதிகுதிக்கு இடம் பெயர்ந்தனர். தற்போது அங்கேயும் தாக்குதல் நடத்தப்படுகிறது. மருத்துவமனை, முகாம் என எல்லா இடத்திலும் தேடுதல் வேட்டை நடத்தி வருகிறது இஸ்ரேல ராணுவம். இதனால் எங்கு செல்வது எனத் தெரியாமல் திண்டாடி வருகின்றனர்.

    இதற்கிடையே மனிதாபிமான உதவிப் பொருட்களை காசாவிற்குள் கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால். இதனால் உடனடியாக போரை நிறுத்தி, உதவிப் பொருட்களை கொண்டு செல்ல அனுமதிக்க வேண்டும் என ஐ.நா. இஸ்ரேலை வலியுறுத்தியுள்ளது.

    இதற்கிடையே, அமெரிக்கா பாராளுமன்ற அனுமதி பெறாமலேயே அவசரகால உதவி என்ற அடிப்படையில் இஸ்ரேலுக்கு ராணுவ உதவி வழங்கியுள்ளது.

    கடந்த அக்டோபர் மாதம் 7-ந்தேதி ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேல் எல்லைக்குள் நுழைந்து கொடூர தாக்குதல் நடத்தினர். இதில் 1200 போர் கொல்லப்பட்டனர்.

    இதனால் ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக போர் பிரகடனம் செய்த இஸ்ரேல், காசா மீது தாக்குதல் நடத்தி வருகிறது. வடக்கு காசா முற்றிலும் சிதைந்துள்ளது. இதுவரை 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதில் சுமார் 9 ஆயிரம் பேர் சிறுமிகள் மற்றும் குழந்தைகள் ஆவார்கள்.

    போரின் நடுவே ஏழு நாட்கள் போர் நிறுத்தம் ஏற்பட்டது. அப்போது சுமார் 100 பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர். இஸ்ரேல் நாட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்து சுமார் 300 பாலஸ்தீனர்கள் விடுவிக்கப்பட்டனர்.

    • உடனடியாக காசாவில் போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும்.
    • நிபந்தனைகளின்றி பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும்.

    ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக போர் பிரகடனம் செய்து காசா மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இஸ்ரேலில் தாக்குதலில் வடக்கு காசா முற்றிலும் சீர்குலைந்ததுள்ளது.

    பாலஸ்தீன மக்கள் மனிதாபிமான உதவிகள் கிடைகாமல் அவதிப்பட்டு வருகிறார்கள். அவர்களுக்கு உதவிகள் கிடைக்க வேண்டும். பிணைக்கைதிகள் விடுவிக்க வேண்டும் என ஐ.நா. தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. பெரும்பாலான உலக நாடுகளும் இதை வலியுறுத்துகின்றன.

    அரபு நாடுகள் ஏற்கனவே இது தொடர்பான தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தன. அப்போது அக்டோபர் 7-ந்தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்தியதற்கு கண்டனம் தெரிவிக்கப்படவில்லைஎன பெரும்பாலான நாடுகள் விமர்சனம் செய்திருந்தன.

    இந்த நிலையில்தான் தற்போது ஐ.நா.வில் உடனடியாக காசாவில் போர் நிறுத்தம் தேவை என மீண்டும் தீர்மானம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தில் உடனடியாக நிபந்தனையின்றி பிணைக்கைதிகளை விடுவிக்க வேண்டும், மனிதாபிமான உதவிகள் கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா உள்ளிட்ட 153 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன. அமெரிக்கா, இஸ்ரேல், ஆஸ்திரியா உள்ளிட்ட 10 நாடுகள் எதிர்த்து வாக்களித்தன. அர்ஜென்டினா, உக்ரைன், ஜெர்மனி உள்ளிட்ட 23 நாடுகள் வாக்களிப்பை புறக்கணித்தன.

    ஐ.நா. சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும் பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் நிறைவேற்றப்படும் அளவிற்கு சட்டப்பூர்வமாக எடுத்துக் கொள்ளப்படாது. உலக மக்களுக்கு ஒரு சம்பவத்தில் உலக நாடுகள் எடுக்கும் முடிவை இதன் மூலமாக வலியுறுத்த மட்டுமே செய்ய முடியும்.

    ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இது தொடர்பான தீர்மானத்தை அமெரிக்கா வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி முறியடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    • பாதுகாப்பு கவுன்சிலில் கொண்டு வந்த தீர்மானத்தை அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி முறியடித்தது.
    • மனிதாபிமானமற்ற தீமையின் உச்சமும் ஆகும்.

    காசாவில் உடனடியாக போர் நிறுத்தம் கோரி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் கொண்டு வந்த தீர்மானத்தை அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி முறியடித்தது. இதற்கு வடகொரியா கண்டனம் தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து வடகொரியா வின் சர்வதேச அமைப்புக ளுக்கான துணை வெளி யுறவுத்துறை மந்திரி கிம்சன் கியோங் கூறும்போது, பல்லாயிரக்கணக்கான பொதுமக்களைக் கொன்று குவித்த கூட்டாளியைப் பாதுகாப்பதற்காக அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வது சட்டவிரோத மற்றும் நியாயமற்ற இரட்டைத் தரங்களின் வெளிப்பாடு மட்டுமல்ல, மனிதாபிமானமற்ற தீமையின் உச்சமும் ஆகும்" என்றார்.

    • காசாவில் "ஒரு மனிதாபிமான பேரழிவை" தடுக்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அதன் செல்வாக்கைப் பயன்படுத்த வேண்டும்.
    • வேகமாக சீர்குலைந்து வரும் மனிதாபிமான அமைப்பு இப்போது முற்றிலும் சரிவை சந்திக்கும் அபாயம் உள்ளது.

    தெற்கு இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியற்கு பதிலடியாக ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக இஸ்ரேல் போர் பிரகடனம் செய்து காசா மீது தாக்குதல் நடத்தியது. காசாவின் வடக்குப் பகுதியில் மூர்க்கத்தனமான வகையில் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் பெரும்பாலான மக்கள் வடக்கு காசாவில் இருந்து வெளியேறினர்.

    ஏழு நாள் போர் நிறுத்தத்திற்குப் பிறகு காசா மீது மீண்டும் தாக்குதல் நடத்த தொடங்கியுள்ளது. தற்போது தெற்கு காசா பகுதிகளிலும் தாக்குதலை விரிவுப்படுத்தியுள்ளது. இதனால் வீடுகளை இழந்து பாலஸ்தீன மக்கள் எங்கே செல்வது என்று தெரியாமல் அல்லாடும் நிலை ஏற்பட்டுள்ளது.

    காசா மக்கள் தொகையில் 18.7 லட்சம் பேர் அவர்களுடைய வீட்டில் இருந்து வெளியேறியுள்ளனர். அவர்கள் அடிப்படை வசதிகள் கிடைக்காமல் அவதிப்படுகிறார்கள். இஸ்ரேல் தாக்குதல் காரணமாக காசாவில் மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தடைபட்டுள்ளது. இந்த நிலையில் முக்கியமான வழித்தடம் துண்டிக்கப்பட்டதால் தொலைத்தொடர்பு வசதிகள் அனைத்தும் செயலிழந்துள்ளது.

    காசாவில் "ஒரு மனிதாபிமான பேரழிவை" தடுக்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அதன் செல்வாக்கைப் பயன்படுத்த வேண்டும் என ஐக்கிய நாடுகள் தலைவர் வலியுறுத்தியுள்ளார்.

    அரபு நாடுகள் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இரண்டு மாதங்களாக காசாவில் இஸ்ரேல் நடத்தும் போரை முடிவுக்கு கொண்டுவர போர் நிறுத்தம் தீர்மானத்தை அமல்படுத்தும் வகையில் அழுத்தம் கொடுத்த வருகின்றன.

    போர் நிறுத்த ஒப்பந்தம் முடிவடைந்ததாக தெரிவித்து டிசம்பர் 1-ந்தேதி முதல் இஸ்ரேல் மீண்டும் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், ஐக்கிய நாடுகளில் அதிகாரமிக்க அமைப்பான பாதுகாப்பு கவுன்சில் போரை நிறுத்த வழிவகை செய்ய வேண்டும் என பாலஸ்தீன நாட்டிற்கான ஐ.நா. தூதர் வலியுறுத்தியுள்ளார்.

    அரபு நாடுகளை சேர்ந்த 57 உறுப்பினர்கள் சவுதி அரேபியா வெளியுறவுத்துறை மந்திரி தலைமையில் அமெரிக்க அதிபர்களை சந்திக்க இருக்கின்றனர். அப்போது போர் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்த இருக்கின்றனர்.

    வேகமாக சீர்குலைந்து வரும் மனிதாபிமான அமைப்பு இப்போது முற்றிலும் சரிவை சந்திக்கும் அபாயம் உள்ளது. முகாம்கள் அல்லது உயிர்வாழ்வதற்கு அத்தியாவசியமானவை இல்லாத பாலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது பொது ஒழங்கை சீர்குலைக்கும் என ஐக்கிய நாடுகள் தலைவர்கள் எச்சரித்துள்ளார்.

    • இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான போர் தீவிரம் அடைந்துள்ளது.
    • ஐ.நா.-வின் நான்கு பள்ளிகள் தாக்குதல்களில் சேதமடைந்துள்ளன.

    காசாவில் உள்ள ஐ.நா. பள்ளியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சிக்கி 15 பேர் உயிரிழந்ததாக ஹமாஸ் சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்து இருக்கிறது. உயிரிழந்தவர்கள் அந்த பள்ளியில் தஞ்சம் புகுந்திருந்த பாலஸ்தீனியர்கள் ஆவர்.

    "இன்று காலை அல்-ஃபகுரா பள்ளி மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 70-க்கும் மேற்பட்டோர் காயமுற்றனர்," என்று சுகாதார துறை செய்தி தொடர்பாளர் அஷ்ரஃப் அல்-கத்ரா தெரிவித்தார்.

    முன்னதாக இந்த தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டனர் என்றும் 54 பேர் காயமுற்றனர் என்றும் கூறப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக இஸ்ரேல் சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை. மேலும் ஐ.நா.-வும் எந்த தகவலும் வழங்கவில்லை.

    காசா எல்லையில் உள்ள நான்கு ஐ.நா. பள்ளிகள் வெடிகுண்டு தாக்குதல்களால் சேதமடைந்ததாக ஐ.நா.-வின் பாலஸ்தீனர்களுக்கான மீட்பு படை தெரிவித்து இருந்தது.

    • தீர்மானத்தில் ஹமாஸ் பெயர் குறிப்பிடப்படவில்லை
    • அக்டோபர் 7-ல் தாக்குதல் நடத்திய ஹமாஸ் கண்டனத்திற்கு தகுதியானது

    ஹமாஸ்- இஸ்ரேல் இடையே மனிதாபிமான போர் நிறுத்தம் ஏற்பட ஐ.நா. சபையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத்தின் மீதான விவாதத்திற்குப் பிறகு வாக்கெடுப்பு நடைபெற்றது.

    193 உறுப்பினர்களை கொண்ட ஐ.நா. சபையில் தீர்மானத்தை ஆதரித்து 120 வாக்குகள் பதிவாகின. 14 வாக்குகள் எதிர்த்து பதிவாகின. 45 உறுப்பினர்கள் வாக்களிக்கவில்லை.

    45 நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இந்தியா சார்பில் ஏன் வாக்களிக்கவில்லை என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

    வாக்கெடுப்பை புறக்கணித்தது குறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்தியாவின் துணை நிரந்தரப் பிரதிநிதி யோஜ்னா பட்டேல் கூறுகையில் ''இந்த விவாதங்கள் பயங்கரவாதம் மற்றும் வன்முறைக்கு எதிராக தெளிவான தகவலை அனுப்பும் என நாங்கள் நம்புகிறோம். அதேபோன்று மனிதாபிமான நெருக்கடியை எதிர்கொள்ளும்போது டிப்ளோமேட்டிக் மற்றும் உரையாடலுக்கான வாய்ப்புகளை விரிவாக்கும் என நம்புகிறோம்'' என்றார்.

    மேலும் இந்தியா சார்பில் "இந்த தீர்மானத்தில் ஹமாஸ் பெயர் குறிப்பிடவில்லை. தீர்மானத்தில் மோதல் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். காசா முனையில் தடையற்ற மனிதாபிமான அணுகல் தேவை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

    ஹமாஸ் கண்டத்தினத்திற்கு தகுதியானவை. அக்டோபர் 7-ந்தேதி தாக்குதல் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. எங்களுடைய கவலையெல்லாம், அவர்கள் பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றவர்களை பற்றியதுதான். பயங்கரவாதம் கொடியது. அதற்கு எல்லை, தேசியம், இனம் தெரியாது.

    நியாயப்படுத்தும் தீவிரவாத செயல்களுக்கு உலகம் விலைபோகக் கூடாது. வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு, பயங்கரவாதத்திற்கு எதிராக ஒன்றுபடுவோம், சகிப்புத்தன்மையற்ற அணுகுமுறையைக் கடைப்பிடிப்போம்" எனத் தெரிவித்துள்ளது.

    கடந்த அக்டோபர் 7-ந்தேதி யாரும் எதிர்பார்க்காத வகையில், ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேல் எல்லைக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தினர். இதில் 1400 பேர் உயிரிழந்தனர். இதற்கு பதிலடியாக இஸ்ரேல் தற்போது தாக்குதல் நடத்தி வருகிறது.

    • ஹமாஸ் தாக்குதலுக்கு பதிலடியாக காசாவில் இஸ்ரேல் கடும் தாக்குதல் நடத்தி வருகிறது
    • காசா மற்றும் பாலஸ்தீன மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் தீர்மானம் கொண்டு வரப்பட்டது

    ஹமாஸ் தாக்குதலை தொடர்ந்து காசா மீது இஸ்ரேல் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. பெரும்பாலான நாடுகள் காசா மீதான தாக்குதல் நிறுத்தப்பட வேண்டும் என குரல் கொடுத்து வருகின்றன.

    ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேல் மீது கடந்த அக்டோபர் 7-ந்தேதி கொடூரமான முறையில் தாக்குதல் நடத்தியதால், அரபு நாடுகள் உள்ளிட்டவை இஸ்ரேலுக்கு எதிராக நேரடியாக களம் இறங்க முடியவில்லை. இதனால் ஹமாஸ் பயங்கரவாதிகளை குறிவைத்து காசா மீது இஸ்ரேல் பயங்கர தாக்குதல் நடத்தி வருகிறது.

    காசாவில் சுமார் 20 லட்சம் மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். பாலஸ்தீன மக்களும் இந்த போரால் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதனால் போர் நிறுத்தம் தொடர்பான தீர்மானம் ஐ.நா. சபையில் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானம் மீது விவாதம் நடைபெற்றது.

    இந்த தீர்மானத்தில், அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் பயங்கரவாதிகளால் தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும். பிணைக்கைதிகளை உடனடியாக விடுவிக்க வலியுறுத்த வேண்டும் என அமெரிக்கா ஆதரவுடன் கனடா, தீர்மானத்தில் மாற்றம் கொண்டு முயற்சித்தது. அது நிராகரிக்கப்பட்டது.

    இறுதியாக 193 உறுப்பினர்களை கொண்ட சபையில், தீர்மானத்திற்கு ஆதரவாக 120 பேர் வாக்களித்தனர். 14 பேர் எதிர்த்து வாக்களித்தனர். 45 பேர் கலந்து கொள்ளவில்லை.

    இந்த தீர்மானத்திற்கு ஐ.நா. சபை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் காரணமாக இஸ்ரேல்- ஹமாஸ் இடையில் போர் நிறுத்தம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • இஸ்ரேலை சேர்ந்த பெரும்பாலானோர் அவர்கள் குடும்பத்தினர் முன் வைத்தே கொலை
    • ஹமாஸ் தாக்குதலுக்கு உயிரிழந்த இஸ்ரேலியர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளது

    ஹமாஸ் பயங்கரவாதிகள் கடந்த 7-ந்தேதி (சனிக்கிழமை) திடீரென இஸ்ரேல் எல்லைக்குள் புகுந்து தாக்குதல் நடத்தினர். 20 நிமிடத்திற்குள் 5 ஆயிரம் ஏவுகணைகள் இஸ்ரேல் நோக்கி சீறிப்பாய்ந்து தாக்கின. மேலும், ராக்கெட் லாஞ்சர், துப்பாக்கி ஆகியவற்றைக் கொண்டு கண்மூடித்தனமாக தாக்கினர்.

    ஒவ்வொரு வீட்டையும் குறிவைத்து தாக்கினர். இதனால் வீட்டிற்குள் இருந்தவர்கள் படுகொலை செய்யப்பட்டனர். வீட்டிற்குள் நுழைந்து ஒரு குடும்பத்தில் உள்ளவர்களை பிணைக் கைதிகளாக பிடிக்கும் முன், அந்த குடும்பத்தின் சிலரை அவர்கள் கண்முன்னே சுட்டுக்கொலை செய்தனர். இப்படி பலரை ஈவிரக்கம் இன்றி கொலை செய்துள்ளனர்.

    அந்த வகையில் நாகின் டி.வி. தொடரில் நடித்துள்ள நடிகை மதுரா நாயக்கின் சகோதரி (உறவினர்) மற்றும் அவரது கணவர் ஆகியோர் அவர்களது குழந்தைகள் கண்முன்னே கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளது. இந்த வேதனையான செய்தியை மதுரா நாய்க் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

    அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ''நான் மதுரா நாயக். இந்தியவாழ் யூதர் (Jew). இந்தியாவில் நாங்கள் மொத்தம் 3 ஆயிரம் பேர் உள்ளோம். அக்டோபர் 7-ந்தேதி, நாங்கள் மகள் மற்றும் மகனை எங்களது குடும்பத்தில் இருந்து இழந்துள்ளோம். என்னுடைய உறவினர் (சகோதரி) ஒடாயா மற்றும் அவரது கணவர் ஆகியோர், அவர்களின் இரண்டு குழந்தைகள் முன் வைத்து கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளனர்.


    துக்கம் மற்றும் உணர்ச்சிகளை விவரிக்க வார்த்தைகள் இல்லை. தற்போது இஸ்ரேல் வலியில் உள்ளது. ஹமாஸின் தாக்குதலில் எங்களது குழந்தைகள், பெண்கள், தெருக்கள் எரிகின்றன. பெண்கள், குழந்தைகள், முதியவர்களை இலக்காக வைத்து தாக்கியுள்ளனர்'' எனத் தெரிவித்துள்ளார்.

    ×