search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமெரிக்க பயணம்"

    • நியூயார்க் நகரின் லோயர் மன்ஹாட்டனில் உள்ள ஒன் வேர்ல்ட் டிரேட் சென்டர் கட்டிடமும் ஜொலித்தது.
    • நியூயார்க்கில் உள்ள எம்பயர் ஸ்டேட் கட்டிடமும் பிரதமர் மோடியை வரவேற்க மூவர்ணக் கொடிகளால் அலங்கரித்தது.

    அமெரிக்க அதிபர் பைடன் மற்றும் முதல் பெண்மணி ஜில் பைடன் ஆகியோரின் அழைப்பின் பேரில் இந்திய பிரதமர் மோடி அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

    அரசு முறைப்பயணமா சென்றுள்ள பிரதமர் மோடி இன்று மூன்றாவது நாளாக அமெரிக்க பயணத்தில் உள்ளார்.

    இந்நிலையில், வரலாற்றுச் சிறப்புமிக்க அமெரிக்கப் பயணத்தில் பிரதமர் மோடியை வரவேற்கும் விதமாக அமெரிக்காவின் முக்கிய இடங்களில் மூவர்ணக் கொடி வண்ணங்களில் ஜொலிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    அதன்படி, அமெரிக்காவின் நியூயார்க் நகரம் மற்றும் கனடா நாட்டின் அந்தரியோ நகரின் எல்லையில் அமைந்துள்ள நயாகரா நீர்வீழ்ச்சியில் பிரதமர் மோடியை வரவேற்கும் விதமாக மூவர்ணக் கொடி வண்ண விளக்குகளால் ஜொலிக்கவிடப்பட்டுள்ளது.

    நியூயார்க் நகர நீர்வீழ்ச்சியில் மட்டுமின்றி கனடா பகுதியிலிருந்தும் நயாகரா நீர்வீழ்ச்சியின் புகைப்படங்களை நியூயார்க்கில் உள்ள இந்திய தூதரகம் பகிர்ந்துள்ளது.

    இதேபோல், நியூயார்க் நகரின் லோயர் மன்ஹாட்டனில் உள்ள ஒன் வேர்ல்ட் டிரேட் சென்டர் கட்டிடத்திலும் மூவர்ணக் கொடியின் வண்ணம் விளக்குகளால் ஜொலிக்கவிடப்பட்டுள்ளது.

    தொடர்ந்து, நியூயார்க்கில் உள்ள எம்பயர் ஸ்டேட் கட்டிடமும் பிரதமர் மோடியை வரவேற்க மூவர்ணக் கொடியின் வண்ண விளக்குகளால் ஜொலித்தது.

    இவை இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான நட்புறவின் சாட்சியம் என்றும் இதற்கு ஏற்பாடு செய்த இந்திய பாரம்பரிய மற்றும் கலை கவுன்சிலுக்கு தூதரக ஜெனரல் டுவீட் மூலம் நன்றி தெரிவித்துள்ளது.

    • இரு நாட்டு தேசிய கீதங்கள் விமானப்படை தளத்தில் இசைக்கப்பட்டன.
    • வாஷிங்டன் டிசியில், பிரதமர் ஜோபைடனுடன் இருதரப்பு சந்திப்பை நடத்துகிறார்.

    அரசு முறை பயணமாக பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவிற்குசென்றுள்ளார். சர்வதேச யோகா தினம் நேற்று கொண்டாடப்பட்டது.

    சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, ஐ.நா. சபை வளாகத்தில் உள்ள புல்வெளியில் நேற்று பிரமாண்ட யோகாசன நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்கிக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமை தாங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் ஐ.நா. உயர் அதிகாரிகள், பணியாளர்கள் மற்றும் 180க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து வந்திருந்த தூதர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டு யோகாசனம் செய்தனர். மேலும், இந்நிகழ்ச்சி கின்னஸ் சாதனை படைத்துள்ளது.

    இதையடுத்து, பிரதமர் மோடி நியூயார்க்கில் இருந்து வாஷிங்டனுக்கு புறப்பட்டார். பின்னர், வாஷிங்டன் டிசியில் உள்ள ஆண்ட்ரூஸ் என்ற விமான தளத்திற்கு வந்தடைந்ததும், பிரதமர் நரேந்திர மோடிக்கு வரவேற்பு மற்றும் மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. 

    அவரது வருகையை குறிக்கும் வகையில் இரு நாட்டு தேசிய கீதங்கள் விமானப்படை தளத்தில் இசைக்கப்பட்டன. அங்கு பிரதமர் மோடி இரண்டு சிறு குழந்தைகளிடமிருந்து ஒரு பூங்கொத்தை பெற்றார்.

    இதுதொடர்பாக வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி தனது டுவிட்டர் பக்கத்தில், "பிரதமர் மோடியின் உத்தியோகபூர்வ அரசு பயணம் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி வாஷிங்டன் டிசியில் உள்ள ஆண்ட்ரூஸ் விமான நிலையத்தில் காலடி எடுத்து வைக்கும் போது அவருக்கு சம்பிரதாய வரவேற்பும் மரியாதையும் அளிக்கப்பட்டது. வாஷிங்டன் டிசியில், பிரதமர் ஜோபைடனுடன் இருதரப்பு சந்திப்பை நடத்துகிறார். அமெரிக்க காங்கிரஸின் கூட்டு அமர்வில் உரையாற்றுவார்" என்று பதிவிட்டுள்ளார்.

    • பிரதமர் மோடி ஜூன் 21 முதல் 24-ம் தேதி வரை அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
    • அமெரிக்க பாராளுமன்றத்தின் கூட்டு அமர்வில் பிரதமர் மோடி உரை நிகழ்த்த உள்ளார்

    வாஷிங்டன்:

    அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் அழைப்பை ஏற்று இந்திய பிரதமர் மோடி ஜூன் 21 முதல் 24-ம் தேதி வரை சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கிறார். அங்கு ஜூன் 22-ல் 7,000 இந்திய அமெரிக்கர்கள் முன்னிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் அமெரிக்க முதல் பெண்மணியும் அவர் மனைவியுமான ஜில் பைடன் முன்னிலையில் வழங்கப்படும் வரவேற்பை ஏற்கிறார்.

    மேலும், அமெரிக்க பாராளுமன்ற இரு சபைகளின் (பிரதிநிதிகளின் சபை மற்றும் செனட் சபை) கூட்டு அமர்வில் உரை நிகழ்த்தவும் உள்ளார்.

    பிரதமர் மோடியின் வருகையை தாங்கள் மிகவும் ஆவலோடு எதிர்நோக்கியுள்ளோம் என அமெரிக்க தேசிய பாதுகாப்பு சபையின் செய்தி தொடர்புக்கான மேற்பார்வையாளர் ஜான் கிர்பி தெரிவித்தார்.

    இந்நிலையில், பிரதமர் மோடியின் அமெரிக்க பயணத்தை முன்னிட்டு வெள்ளை மாளிகை அருகே அமெரிக்க கொடியுடன், இந்திய கொடியும் பறக்க விடப்பட்டுள்ளது.

    இது இந்தியாவின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாக உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • பிரதமர் மோடி வரும் ஜூன் 22-ம் தேதி அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
    • அமெரிக்கா வரும் பிரதமர் மோடிக்கு அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் விருந்தளிக்கிறார்.

    வாஷிங்டன்:

    வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

    பிரதமர் நரேந்திர மோடி வரும் ஜூன் 22-ம் தேதி அமெரிக்காவுக்கு அதிகாரப்பூர்வ சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அவரது இந்தப் பயணத்தின்போது பிரதமர் மோடிக்கு, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி ஜில் பைடன் ஆகியோர் விருந்தளிக்கின்றனர் என தெரிவித்துள்ளது.

    மேலும், அவரது இந்தப் பயணம் இரு நாடுகளின் வெளிப்படையான, திறந்த நிலையிலான, வளம் சார்ந்த பகிரப்பட்ட உள்ளார்ந்த செயல்பாடுகளுக்கு வலிமை சேர்க்கும். இந்தோ-பசிபிக் பிராந்திய பகுதிகளைப் பாதுகாக்கும். பாதுகாப்புத்துறை, தூய்மையான எரிசக்தி மற்றும் விண்வெளி உள்ளிட்ட துறைகளில் நமது செயல்திட்டம் சார்ந்த தொழில்நுட்ப உறவை மேம்படுத்தும் வகையிலான பகிரப்பட்ட தீர்மானம் ஆகியவற்றையும் பாதுகாக்கும் எனவும் தெரிவித்துள்ளது.

    கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பர் 23-ம் தேதி பிரதமர் மோடி அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×