search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஐக்கிய நாடுகள் சபை"

    • சிஏஏ குறித்து ஐ.நா.வில் கேள்வி எழுப்பிய பாகிஸ்தானுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்தது.
    • இந்தியா தொடர்புடைய விஷயங்களில் பாகிஸ்தான் தவறான கண்ணோட்டத்தை கொண்டுள்ளது.

    புதுடெல்லி:

    ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை கூட்டத்தில் பாகிஸ்தான் தூதர் முனிர் அக்ரம் பேசுகையில், அயோத்தி ராமர் கோவில் மற்றும் குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து குறிப்பிட்டார்.

    இந்நிலையில், ஐ.நா.சபையில் சிஏஏ சட்டம் மற்றும் அயோத்தி ராமர் கோவில் குறித்து கேள்வி எழுப்பிய பாகிஸ்தானுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக ஐ.நா.விற்கான இந்தியாவின் நிரந்தரத் தூதர் ருசித்ரா கம்போஜ் கூறியதாவது:

    இந்த அவையில் பாகிஸ்தான் ஒரே விஷயத்தை திரும்பத் திரும்ப சொல்லி வருகிறது. உலகம் வளர்ந்து வருகிறது. இந்தியாவின் அண்டை நாடானது ஒரே இடத்தில் தேங்கி நிற்பதுடன், ஒரே விஷயத்தை திரும்பத் திரும்பச் சொல்லி வருகிறது.

    எனது நாட்டுடன் தொடர்புடைய விஷயங்களில், அந்நாட்டு குழுவினர் தவறான கண்ணோட்டத்தை காண்பது உண்மையில் துரதிர்ஷ்டவசமானது என தெரிவித்தார்.

    • கத்தார் நாடு சர்வதேச ஜனநாயக தினத்தை விளம்பரப்படுத்தும் பணிகளில் மும்முரம் காட்டியது.
    • ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 15-ம் தேதி சர்வதேச ஜனநாயக தினம் கடைபிடிக்கப்படுகிறது.

    ஜனநாயகம் என்பது "democracy" என்ற கிரேக்க வார்த்தையின் தமிழாக்கம் ஆகும். கிரேக்க மொழியில் டெமோஸ் மற்றும் கிராடோஸ் என்ற இரு வார்த்தைகளை சேர்த்தது ஆகும். இந்த இரு வார்த்தைகளுக்கு குடிமகன் மற்றும் சக்தி என்று பொருள்படும். மனித உரிமைகளுக்கான மரியாதை அளித்தல், அடிப்படை சுதந்திரம் வழங்குவது மற்றும் சரியான கால இடைவெளியில் தேர்தல்களை நடத்துவது உள்ளிட்டவை ஜனநாயகத்தின் அடிப்படை கூறு என்று ஐக்கிய நாடுகள் சபை கூறுகிறது.

    எந்த ஒரு நாட்டில் மக்கள் தங்களுக்கான தலைவர்களை வாக்களித்து தேர்வு செய்யும் அதிகாரம் வழங்கப்பட்டு இருக்கிறதோ, அதனை ஜனநாயக நாடு என்று அழைக்கிறோம். மக்களால் மக்களுக்காக நடத்தப்படும் அரசாங்கம் என்ற கருத்தை மக்களாட்சி என ஆபிரகாம் லிங்கன் தெரிவித்து இருக்கிறார். 2007-ம் ஆண்டு நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக்குழு கூட்டத்தில் சர்வதேச ஜனநாயக தினம் உலகம் முழுக்க கடைபிடிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது.

     

    அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 15-ம் தேதி சர்வதேச ஜனநாயக தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதற்கான தீர்மானம் 2007-ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. அதன்படி 2008-ம் ஆண்டுல் இருந்து ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 15-ம் தேதி சர்வதேச ஜனநாயக தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

    தேசிய பாராளுமன்றங்கள் ஒருங்கிணைந்த சர்வதேச அமைப்பு தான் பாராளுமன்ற யூனியன். இந்த அமைப்பு தான் முதன் முதலாக 1997 செப்டம்பர் 15-ம் தேதி சர்வதேச ஜனநாயக தினமாக அறிவித்தது. இதைத் தொடர்ந்து வந்த ஆண்டுகளில் கத்தார் நாடு சர்வதேச ஜனநாயக தினத்தை விளம்பரப்படுத்தும் பணிகளில் மும்முரம் காட்டி வந்தது.

    இதன் பலனாகவே 2007, நவம்பர் 8-ம் தேதி ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக்குழு கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பாராளுமன்ற யூனியன் செப்டம்பர் 15-ம் தேதி சர்வதேச ஜனநாயக தினமாக கொண்டாட வேண்டும் என்ற பரிந்துரை வழங்கி இருந்தது. இதன் காரணமாக 2008-ம் ஆண்டு முதல்-முறையாக இது தொடர்பான முதல் கொண்டாட்ட நிகழ்வு நடைபெற்றது.

    அதன்பிறகு ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு அமைப்புகளும் சர்வதேச ஜனநாயக தினத்தை பிரத்யேக "கரு" ஒன்றை அறிவித்து கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நாளில் ஜனநாயக உரிமைகள் அனைவருக்கும் கிடைப்பதை உறுதிப்படுத்தவும், ஜனநாயக உரிமையின் அவசியம் பற்றியும் பல்வேறு அமைப்புகளும் உலகம் முழுக்க நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றன. 

    • பிரதமர் மோடி அமெரிக்காவுக்கு அரசுமுறை பயணம் மேற்கொள்கிறார்.
    • ஐக்கிய நாடுகள் சபையில் நடக்கும் யோகா தினம் உள்பட பல நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.

    புதுடெல்லி:

    பிரதமர் நரேந்திர மோடி அரசுமுறை பயணமாக அடுத்த வாரம் அமெரிக்கா செல்கிறார். வரும் 21 முதல் 24-ம் தேதி வரை அமெரிக்காவில் பல நிகழ்ச்சிகளில் மோடி பங்கேற்கிறார்.

    இந்நிலையில், வரும் 21-ம் தேதி முதல் நிகழ்ச்சியாக, நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை வளாகத்தில் நடைபெறும் சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

    மறுநாளான 22-ம் தேதி பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்திக்கிறார். பிரதமர் மோடியை கவுரவிக்கும் வகையில், அவருக்கு அதிபர் ஜோ பைடன் இரவு நேர விருந்து அளிக்கிறார். அதற்கடுத்த நாள் வெள்ளை மாளிகையில் இரு தலைவர்களும் சந்தித்து, இருதரப்பு உறவுகள் குறித்து பேசுகின்றனர். மேலும், அமெரிக்க பாராளுமன்றத்திலும் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.

    அமெரிக்கா, இந்தியா ராணுவ ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டம், அமெரிக்க நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள் கூட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.

    • பயங்கரவாதிகளுக்கு பாதுகாப்பான புகலிடங்களை பாகிஸ்தான் வழங்கி வருகிறது.
    • மேலும் அவர்களுக்கு தண்டனையின்றி செய்கிறது என ஐ.நா.வுக்கான இந்திய தூதர் தெரிவித்தார்.

    ஜெனீவா:

    பயங்கரவாதிகளுக்கு புகலிடம் அளித்து, அவர்களுக்கு பாதுகாப்பினை வழங்கும் மற்றும் தண்டனையின்றி அதைச் செய்யும் ஒரு நாடாக பாகிஸ்தான் உள்ளதாக ஐ.நாவுக்கான இந்திய தூதர் பிரதீக் மாத்தூர் கண்டனம் தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:

    இரண்டு நாட்கள் தீவிரமான விவாதங்களுக்குப் பிறகு, மோதல் மற்றும் முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கான ஒரே பாதை சமாதானப் பாதைதான் என்பதை நாம் அனைவரும் ஒப்புக்கொண்ட நேரத்தில், இத்தகைய விரும்பத்தகாத ஆத்திரமூட்டல் சம்பவங்கள் வருந்தத்தக்கது. இது நிச்சயமாக தவறானது.

    பாகிஸ்தானின் பிரதிநிதிக்கு நாங்கள் வழங்கும் அறிவுரை என்னவென்றால், கடந்த காலத்தில் நாங்கள் பயன்படுத்திய ஏராளமான சம்பவங்களை கூறலாம்.

    ஐ.நா.சாசனத்தின் கொள்கைகளை இந்தியா நிலைநிறுத்துகிறது, நாங்கள் எப்போதும் பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திரம் மட்டுமே ஒரே வழி என்று கூறுவோம் என தெரிவித்தார்.

    • ஐக்கிய நாடுகள் சபை தலைவராக இருந்து வருபவர் அப்துல்லா ஷாஹித்.
    • 2 நாள் பயணமாக இன்று இந்தியா வருகை தர உள்ளார்.

    நியூயார்க்:

    ஐக்கிய நாடுகள் பொதுச்சபை தலைவராக மாலத்தீவுகள் நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரி அப்துல்லா ஷாஹித் இருந்து வருகிறார்.

    இந்நிலையில், அப்துல்லா ஷாஹித் 2 நாள் அரசுமுறை பயணமாக ஆகஸ்ட் 28 தேதி இந்தியா வருகை தர உள்ளார்.

    இந்த வருகையின்போது ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜக்தீப் தங்கர், வெளியுறவு செயலாளர் வினய் மோகன் குவாத்ரா உள்பட பலரைச் சந்தித்து பேச உள்ளார்.

    • ஐ.நா.சபையில் ரஷியாவிற்கு எதிராக நடந்த ஓட்டெடுப்புகளை இந்தியா புறக்கணித்தே வந்தது.
    • முதன்முறையாக இந்தியா ரஷியாவிற்கு எதிராக ஓட்டளித்தது.

    ஐ.நா:

    உக்ரைன் மீது ரஷியா கடந்த பிப்ரவரி 24-ம் தேதி போர் தொடுத்த பிறகு, ஐக்கிய நாடுகள் சபையில் ரஷ்யாவிற்கு எதிராக இதுவரை நடந்த ஓட்டெடுப்புகளை இந்தியா புறக்கணித்தே வந்தது.

    இதற்கிடையே, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்சி ஐக்கிய நாடுகள் சபையில் வீடியோ கான்பரன்சிங் வாயிலாக உரையாற்ற அழைப்பு விடுக்க வேண்டி ஓட்டெடுப்பு கொண்டு வரப்பட்டது. இதில் வழக்கமாக இந்தியா புறக்கணிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

    இந்நிலையில், ரஷியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை இந்தியா எடுத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

    இது குறித்து இந்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பக்சியிடம் கூறுகையில், ஜெலன்ஸ்கி காணொலி வாயிலாக உரையாற்றுவதற்கான முன்மொழிவு கொண்டு வரப்பட்டது. அதற்கு நாங்கள் ஆதரவு மட்டுமே அளித்தோம். அவர் ஏற்கனவே இருமுறை உரையாற்றியுள்ளார் என தெரிவித்தார்.

    • இந்தியா, அமெரிக்கா கொண்டு வந்த திட்டத்தை செயல்படுத்த விடாமல் வீட்டோ அதிகாரத்தால் சீனா தடுத்து நிறுத்தியது.
    • இதுபோன்ற இரட்டை நிலைகள் தடை விதிக்கும் கவுன்சிலின் நம்பகத்தன்மையை குலைத்துவிடும் என இந்தியா கூறியது.

    நியூயார்க்:

    சர்வதேச பயங்கரவாதியான மசூத் அசாரின் சகோதரர் அப்துல் ராப்புக்கு தடை கொண்டு வர ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா, அமெரிக்க நாடுகள் முயற்சி மேற்கொண்டன. இந்த முயற்சிக்கு ஆதரவாக 14 நாடுகள் முன்வந்தன. ஆனால், சீனா இந்த முயற்சிக்கு முட்டுக்கட்டை போட்டது.

    இந்தியா, அமெரிக்கா கொண்டு வந்த திட்டத்தை செயல்படுத்த விடாமல் தனது வீட்டோ அதிகாரத்தால் தடுத்து நிறுத்தியது.

    இதேபோல், கடந்த ஜூனில் நடந்த ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதி அப்துல் ரஹ்மான் மக்கி என்பவரை தடுப்பு பட்டியலில் சேர்க்க இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகியவை கூட்டாக பரிந்துரை செய்தன. இந்தப் பரிந்துரையையும் சீனா கடைசி நேரத்தில் நிறுத்திவைத்தது.

    இதற்கு முன்னரும் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் சிலரை தடுப்பு பட்டியலில் சேர்க்க இந்தியா கோரியபோது சீனா முட்டுக்கட்டை போட்டது.

    இந்நிலையில், ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் இந்த மாதம் சீனா தலைமையில் சமீபத்தில் நடந்தது. அதில் ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி ருச்சிரா காம்போஜ் பேசியதாவது:

    பயங்கரவாதிகள் மீதான தடுப்பு நடவடிக்கையை எவ்வித நியாயமான காரணங்களும் இன்றி நிறுத்தி வைப்பது முடிவுக்கு வரவேண்டும். தடுப்பு கமிட்டி வெளிப்படைத் தன்மையுடன் செயல்பட வேண்டும். உலகின் மிக மோசமான சில பயங்கரவாதிகளை தடுப்பு பட்டியலில் சேர்க்க அளிக்கப்பட்ட பரிந்துரை முறையான காரணமின்றி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    இதுபோன்ற இரட்டை நிலைகள் தடை விதிக்கும் கவுன்சிலின் நம்பகத்தன்மையை குலைத்துவிடும். சர்வதேச பயங்கரவாதிகளுக்கு எதிராக நாம் போராடும்போது ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர்கள் ஒரே குரலை வெளிப்படுத்துவர் என நம்புகிறேன் என தெரிவித்தார்.

    ×