செய்திகள்

ஜப்பானில் நடக்கும் ஜி 20 மாநாட்டில் ஜூன் 27ல் பிரதமர் மோடி பங்கேற்கிறார் - வெளியுறவுத்துறை

Published On 2019-06-21 11:19 GMT   |   Update On 2019-06-21 11:19 GMT
ஜப்பானின் ஒசாகா நகரில் நடைபெறும் ஜி-20 மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஜூன் 27-ம் தேதி பங்கேற்க உள்ளார் என வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:

ஜி-20 என்று சுருக்கமாக அழைக்கப்படும் அமைப்பானது உலகில் வளர்ச்சி அடைந்த 20 நாடுகளான அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, ரஷியா, சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, தென் கொரியா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய‌வை இடம்பெற்றுள்ளன.
 
இந்த அமைப்பின் சார்பில் ஆண்டுதோறும் உச்சி மாநாடுகள் நடைபெற்று வருகிறது. அவ்வகையில், இந்த ஆண்டுக்கான உச்சி மாநாடு ஜப்பான் நாட்டின் ஒசாகா நகரில் நடைபெறுகிறது. 

இந்த மாநாட்டில் ஜூன் 27-ம் தேதி முதல் 29ம் தேதி வரை பிரதமர் மோடி பங்கேற்பார் என வெளியுறவுத்துறை இன்று தெரிவித்துள்ளது.

இந்த மாநாட்டின்போது சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உள்ளிட்ட பல்வேறு முக்கிய தலைவர்களை சந்தித்து பிரதமர் மோடி ஆலோசனை நடத்துவார் என இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News