செய்திகள்
ராகுல்காந்தி போல இருந்ததால் தோற்றத்தை மாற்றிய பா.ஜனதா ஆதரவாளர்
சூரத்தை சேர்ந்த பாரதிய ஜனதா ஆதரவாளர் ராகுல் காந்தி போல இருந்ததால் தனது தோற்றத்தை மாற்ற 20 கிலோ வரை தன்னுடைய எடையை அதிகரித்திருக்கிறார். #PrashantSethi
சூரத்:
சூரத் நகரை சேர்ந்தவர் பிரசாந்த் சேத்தி, ஓட்டல் உரிமையாளர். கடந்த 2014ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலின் போது இவர் சமூக வலைதளங்களில் பரபரப்பான மனிதர் ஆனார்.
பிரசாந்த் பார்ப்பதற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போலவே இருப்பார். இவரது ஓட்டலுக்கு வரும் வாடிக்கையாளர்களும் நண்பர்களும் இதை அவரிடம் சொல்லிக்கொண்டே இருப்பார்கள். இந்த தகவல் வெளியே தெரிய பத்திரிகை, டிவி சேனல், சமூக வலைதளம் என்று வைரல் ஆனார். 5 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது பாராளுமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது.
இப்போதும் அவர் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறார். காரணம் தான் ராகுல் காந்தி போன்று தோற்றமளிக்க விரும்பவில்லை என கூறியதுதான். அதற்காக தனது ஹேர் ஸ்டைலை மாற்றியுள்ளார். மேலும் தனது தோற்றத்தை மாற்ற 20 கிலோ வரை தன்னுடைய எடையை அதிகரித்திருக்கிறார்.
இது தொடர்பாக பிரசாந்த் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: ‘நான் ராகுல் காந்தி போன்று தோற்றத்தில் இருக்க விரும்பவில்லை. அவர் ஒரு தேசிய தலைவர். அவரை நான் மதிக்கிறேன். ஆனால் நான் ஒரு பா.ஜனதா ஆதரவாளர். மோடியின் ஆதரவாளர். ராகுல் பெரிதாக எதையும் சாதிக்கவில்லை. அவர் தனது சாதனைகளாக எதைப் பற்றிப் பேச முடியும்? ஆனால் நாட்டின் குடிமகனாக எனக்கும் அவர் மீது மதிப்பும் நம்பிக்கையும் இருக்கிறது. பிரதமர் மோடியின் வாழ்க்கை படத்தில் ராகுல் காந்தியாக நடிக்கும் வாய்ப்பு வந்தது.
ஆனால் நான் மறுத்து விட்டேன். காங்கிரஸ் கட்சியின் சித்தாந்தங்களுக்கு நான் எதிரானவன். ராகுலை போல் நடிக்க கூட விரும்பவில்லை’ என்று அவர் கூறியுள்ளார். பிரசாந்தின் தந்தை காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். அவர் பிரசாந்தை இளைஞர் காங்கிரசில் சேருமாறும், அதன்மூலம் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுமாறும் பல முறை கூறியும் பிரசாந்த் மறுத்துவிட்டாராம். #PrashantSethi
சூரத் நகரை சேர்ந்தவர் பிரசாந்த் சேத்தி, ஓட்டல் உரிமையாளர். கடந்த 2014ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலின் போது இவர் சமூக வலைதளங்களில் பரபரப்பான மனிதர் ஆனார்.
பிரசாந்த் பார்ப்பதற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போலவே இருப்பார். இவரது ஓட்டலுக்கு வரும் வாடிக்கையாளர்களும் நண்பர்களும் இதை அவரிடம் சொல்லிக்கொண்டே இருப்பார்கள். இந்த தகவல் வெளியே தெரிய பத்திரிகை, டிவி சேனல், சமூக வலைதளம் என்று வைரல் ஆனார். 5 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது பாராளுமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது.
இப்போதும் அவர் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறார். காரணம் தான் ராகுல் காந்தி போன்று தோற்றமளிக்க விரும்பவில்லை என கூறியதுதான். அதற்காக தனது ஹேர் ஸ்டைலை மாற்றியுள்ளார். மேலும் தனது தோற்றத்தை மாற்ற 20 கிலோ வரை தன்னுடைய எடையை அதிகரித்திருக்கிறார்.
இது தொடர்பாக பிரசாந்த் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: ‘நான் ராகுல் காந்தி போன்று தோற்றத்தில் இருக்க விரும்பவில்லை. அவர் ஒரு தேசிய தலைவர். அவரை நான் மதிக்கிறேன். ஆனால் நான் ஒரு பா.ஜனதா ஆதரவாளர். மோடியின் ஆதரவாளர். ராகுல் பெரிதாக எதையும் சாதிக்கவில்லை. அவர் தனது சாதனைகளாக எதைப் பற்றிப் பேச முடியும்? ஆனால் நாட்டின் குடிமகனாக எனக்கும் அவர் மீது மதிப்பும் நம்பிக்கையும் இருக்கிறது. பிரதமர் மோடியின் வாழ்க்கை படத்தில் ராகுல் காந்தியாக நடிக்கும் வாய்ப்பு வந்தது.
ஆனால் நான் மறுத்து விட்டேன். காங்கிரஸ் கட்சியின் சித்தாந்தங்களுக்கு நான் எதிரானவன். ராகுலை போல் நடிக்க கூட விரும்பவில்லை’ என்று அவர் கூறியுள்ளார். பிரசாந்தின் தந்தை காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். அவர் பிரசாந்தை இளைஞர் காங்கிரசில் சேருமாறும், அதன்மூலம் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுமாறும் பல முறை கூறியும் பிரசாந்த் மறுத்துவிட்டாராம். #PrashantSethi