செய்திகள்

மசூத் அசார்ஜி என்று கூறிய ராகுல் காந்தி மீது போலீசார் வழக்கு

Published On 2019-03-14 11:04 GMT   |   Update On 2019-03-14 11:04 GMT
ஜெய்-இ-முகமது பயங்கரவாத இயக்க தலைவரை மசூத் அசார்ஜி என்று கூறிய ராகுல் காந்தி மீது போலீசார் தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி:

ஜெய்-இ-முகமது பயங்கரவாத இயக்க தலைவர் மசூத்அசாரை காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி சமீபத்தில் மரியாதையாக பேசினார். அவர் மசூத் அசார்ஜி என்று கூறிப்பிட்டார். அவரது இந்த பேச்சுக்கு பா.ஜனதா ஏற்கனவே கண்டனம் தெரிவித்து இருந்தது.

இந்த நிலையில் இது தொடர்பாக ராகுல் காந்தி மீது அசாம் மாநில போலீசில் சமூக ஆர்வலர் புகார் அளித்தார். இது தொடர்பாக ராகுல் காந்தி மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Tags:    

Similar News