செய்திகள்
புத்தாண்டு இரவில் ஈவ் டீசிங்கை தடுக்க மும்பையில் 40 ஆயிரம் போலீசார் ரோந்துப் பணி
மும்பை நகரில் புத்தாண்டு இரவின்போது ஈவ் டீசிங்கில் ஈடுபடுவோரை கண்காணிக்கும் ரோந்துப் பணியில் 40 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்படுகின்றனர். #NewYearCelebrations #Eveteasing #MumbaiPolice
மும்பை:
நாட்டின் வர்த்தக தலைநகரான மும்பையில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் விமர்சையாக நடைபெறும்.
இந்நிலையில், மும்பை நகரில் புத்தாண்டு இரவில் ஈவ் டீசிங்கில் ஈடுபடுவோரை கண்காணிக்கும் வகையில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது என போலீசார் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக, மும்பை துணை கமிஷனர் மஞ்சுநாத் சிங் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், மும்பை நகரில் புத்தாண்டு இரவில் ஈவ் டீசிங்கில் ஈடுபடுவோரை கண்காணிக்கும் வகையில் 40 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர் என தெரிவித்துள்ளார்.
பெண்களை ஈவ் டீசிங் செய்வது மற்றும் பாலியல் பலாத்காரங்கள் ஆகியவை நடக்காமல் கண்காணிப்பதற்காக மும்பை நகருக்கு உட்பட்ட முக்கிய பகுதிகளில் சிறப்பு போலீசார் ரோந்துப் பணிகளில் ஈடுபடுவார்கள் எனவும் தெரிவித்துள்ளார். #NewYearCelebrations #Eveteasing #MumbaiPolice