திருப்பதியில் சட்டக்கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை
திருப்பதி:
ஆந்திர மாநிலம் கடப்பாவை சேர்ந்தவர் சுஷ்மிதா (24). திருப்பதியில் உள்ள பத்மாவதி மகளிர் கல்லூரியில் எல்.எல்.பி. இறுதி ஆண்டு படித்து வந்தார். கல்லூரி அருகேயுள்ள தனியார் விடுதியில் தங்கி கல்லூரிக்கு சென்று வந்தார்.
நேற்று மதியம் சுஷ்மிதாவுடன் விடுதியில் தங்கி படிக்கும் மாணவிகள் கல்லூரிக்கு சென்று விட்டனர். ஆனால் சுஷ்மிதா கல்லூரிக்கு செல்லவில்லை.
மாலை கல்லூரி முடிந்து விடுதி அறைக்கு வந்து பார்த்தபோது கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது.
இதுகுறித்து மாணவிகள் விடுதி வார்டனுக்கு தகவல் கொடுத்தனர். வார்டன் வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது சுஷ்மிதா தூக்கில் பிணமாக தொங்கினார்.
இதுகுறித்து யுனிவர்சிட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். மாணவியின் பிணத்தை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக ரூயா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து காதல் தோல்வியால் தற்கொலை செய்தாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.