செய்திகள்

சிறுமிக்கு பாலியல் தொல்லை- போக்சோ சட்டத்தில் பட்டதாரி வாலிபர் கைது

Published On 2018-11-20 16:16 GMT   |   Update On 2018-11-20 16:16 GMT
ஆந்திர மாநிலம் மதனப்பல்லி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
திருப்பதி:

ஆந்திர மாநிலம் மதனப்பல்லி அடுத்த கோலபையிலு கிராமத்தை சேர்ந்தவர் 4 வயது சிறுமி. இவர் தனது தாய், தந்தையுடன் தர்பார் சிவாஜி பாஷா என்பவரின் வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வந்தனர். தாபார் சிவாஜி பாஷா (20) மதனப்பல்லியில் உள்ள தனியார் கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று 4 வயது சிறுமிக்கு பாடம் கற்று கொடுப்பதாக அழைத்து சென்று உள்ளார். பின்னர் தன்னுடைய அறையில் வைத்து சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அப்போது சிறுமி அலறி கூச்சலிட்டதால் சிறுமியின் தாயார் மற்றும் பொதுமக்கள் சென்று கதவை திறக்குமாறு கூறினர்.

ஆனால் தர்பார் சிவாஜி பாஷா கதவை திறக்காததால் கதவை உடைத்து அறையின் உள்ளே சென்று சிறுமியை மீட்டனர். இதுகுறித்து மதனப்பல்லி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். மேலும் சிறுமியை சிகிச்சைக்காக மதனப்பல்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

மதனப்பல்லி எம்.எல்.ஏ. தேசாய் சிப்பாரெட்டி ஆஸ்பத்திரிக்கு வந்து சிறுமியின் உடல் நலன் குறித்து விசாரித்தார். மேலும் சிறுமிக்கு தேவையான வசதிகள் செய்து தருவதாகவும் உறுதி அளித்தார்.

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை உடனடியாக கைது செய்ய கோரி சிறுமியின் உறவினர்கள் ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

இதையடுத்து மதனபல்லி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் வாலிபரை போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
Tags:    

Similar News