செய்திகள்
டெல்லி தசரா விழாவில் ராகுல், சோனியா, மன்மோகன் சிங் பங்கேற்பு
டெல்லியில் ஸ்ரீ நவ் தர்மிக் லீலா கமிட்டி சார்பில் இன்றிரவு நடைபெற்ற தசரா விழாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், சோனியா காந்தி பங்கேற்றனர். #RahulGandhi #RahulGandhiDusshera #DelhiDusshera #Dussheracelebrations
புதுடெல்லி:
தலைநகர் டெல்லியில் ஆண்டுதோறும் ஸ்ரீ நவ் தர்மிக் லீலா கமிட்டி என்ற அமைப்பு தசரா விழாவை வெகு விமரிசையாக கொண்டாடி வருகிறது.
அவ்வகையில், நிறைவுநாளான இன்று ராமலீலா நாடகமும், அதைதொடர்ந்து ராவணன் கொடும்பாவி எரிப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது. இவ்விழாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், சோனியா காந்தி பங்கேற்றனர்.
ராகுல் காந்தி, மன்மோகன் சிங் ஆகியோர் தீவட்டியை அம்பின் மூலம் செலுத்தி ராவணன் கொடும்பாவியை கொளுத்தி எரித்தனர். #RahulGandhi #RahulGandhiDusshera #DelhiDusshera #Dussheracelebrations