செய்திகள்

பாஜக எம்.எல்.ஏ.வின் மகனின் ஆடம்பர கார் மோதியதில் இளம்பெண் பலி - ஒரே நாளில் ஜாமீனில் விடுதலை

Published On 2018-10-09 09:54 GMT   |   Update On 2018-10-09 09:54 GMT
கோவாவில் பாஜக எம்.எல்.ஏ.வின் மகன் ஓட்டிய ஆடம்பர கார் மோதிய விபத்தில் 18 வயது இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #GoaMLASon #CarAccident
பனாஜி:

கோவா மாநிலத்தின் ஆளும் பாஜக அரசின் எம்.எல்.ஏ.வான கிலென் டிக்லோவின் மகன் கைல் கிலென் சௌசா டிக்லோ நேற்று இரவு தேசிய நெடுஞ்சாலையில் தனது ஆடம்பர காரில் வேகமாக சென்றுகொண்டு இருந்தபோது சாலையை கடக்க முயன்ற 2 இளம்பெண்கள் மீது வேகமாக மோதினார்.

இந்த விபத்தில் படுகாயம் அடைந்த இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதில் டைனியாட் வஹித் பிஸ்தி என்ற 18 வயது பெண் சிகிச்சை பலனின்றி பலியானார். சம்ரின் காலித் பிஸ்தி என்ற மற்றொரு பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.



இந்த விபத்தின்போது அப்பகுதியில் இருந்த மக்கள் கார் மீது கற்களை எரிந்து சேதப்படுத்தவும், காரில் தீ வைக்கவும் முயற்சித்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் பாஜக எம்.எல்.ஏ.வின் மகன் கைல் கிலென் சௌசா டிக்லோ கைது செய்யப்பட்டார். மேலும், காரில் தீ வைக்க முயன்ற பொதுமக்கள் 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில், நேற்று இரவு கைது செய்யப்பட்ட எம்.எல்.ஏ.வின் மகன் கைது செய்யப்பட்டு இன்று ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #GoaMLASon #CarAccident
Tags:    

Similar News