தமிழ்நாடு

உச்சநீதிமன்றத்தில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் மேல்முறையீடு

Published On 2024-04-29 02:24 GMT   |   Update On 2024-04-29 02:24 GMT
  • ராஜேஷ் தாஸிற்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
  • சென்னை உயர் நீதிமன்றத்தில் ராஜேஷ் தாஸ் தாக்கல் செய்த மனு தள்ளுபடி.

பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் சரணடைய விலக்கு அளிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் ராஜேஷ்தாஸ் மேல்முறையீடு செய்துள்ளார்.

முன்னதாக, பாலியல் தொல்லை அளித்தது தொடர்பான வழக்கில் விழுப்புரம் நீதிமன்றத்தில் ராஜேஷ் தாஸிற்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த தண்டனையை நிறுத்தி வைக்கவும், சரணடைவதில் விலக்கு அளிக்கவும் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ராஜேஷ் தாஸ் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

விசாரணை நீதிமன்றத்தில் சரணமடையுமாறும், அதன்பிறகு தண்டனையை நிறுத்தி ஜாமீன் வழங்க கோரலாம் எனவும் உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து, ராஜேஷ் தாஸ் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.

Tags:    

Similar News