செய்திகள்

ஜோதிராதித்யா சிந்தியாவுக்கு கொலை மிரட்டல் விடுத்த பாஜக எம்.எல்.ஏ மகன்

Published On 2018-09-03 21:23 GMT   |   Update On 2018-09-03 23:26 GMT
மத்தியப்பிரதேசம் மாநில காங்கிரஸ் மூத்த தலைவர் ஜோதிராதித்யா சிந்தியாவை சுட்டுகொன்று விடுவேன் என பாஜக எம்.எல்.ஏ. மகன் பேஸ்புக்கில் கொலை மி்ரட்டல் விடுத்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. #JyotiradityaScindia
போபால்:

மத்தியப்பிரதேச மாநிலத்திற்கு விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அங்குள்ள தாமோக் மாவட்டம் விதான்சபா தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்து வருகிறார் தேவி கஹாதிக். இவர் பாஜகவை சேர்ந்தவர். இவரது மகன் பிரி்னஸ்தீப்.

இவர் தனது பேஸ்புக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் ஜோதிராதித்யா சிந்தியாவுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

அதில், தனது தாயார் தொதிக்குள் வரும் 5-ம் தேதி ஜோதிராதித்யா சிந்தியா பிரசாரம் செய்ய வருவதாக தெரியவந்துள்ளது. அவ்வாறு சிந்தியா தொகுதிக்குள் நுழைந்தால் அவரை நானே துப்பாக்கியால் சுட்டுக் கொல்வேன், உயிர்மீது ஆசை இருந்தால் தொகுதிக்குள் நுழையாதே என பதிவிட்டிருந்தார்.

இதுகுறீத்து ஜோதிராதியா சிங் கூறுகையில், இந்த மிரட்டல் மூலம் பாஜகவின் உண்மையான முகத்தை அனைவரும் அறிந்து கொண்டுள்ளனர் என தெரிவித்தார்.

மூத்த காங்கிரஸ் தலைவருக்கு பாஜக எம்.எல்.ஏ மகன் கொலை மிரட்டல் விடுத்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. #JyotiradityaScindia
Tags:    

Similar News