search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காங்கிரஸ் தலைவர் ஜோதிராதித்யா சிந்தியா"

    மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி செய்துவரும் பாஜகவினர் விவசாயி, வாக்காளர் என்ற முக்கியமான கடவுள்களை மறந்துவிட்டனர் என காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ஜோதிராதித்யா குற்றம் சாட்டியுள்ளார். #JyotiradityaScindia #BJP
    போபால்:

    மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் காங்கிரஸ் சார்பில் பரிவர்தன் பேரணி நடத்தப்பட்டு வருகிறது. இந்த பேரணியில் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ஜோதிராதித்யா சிந்தியா நேற்று கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

    நமக்கு உணவிடும் அன்னதாதாவான விவசாயிகள் மற்றும் நம்மை தேர்வு செய்யும் வாக்காளர்கள் ஆகியோரே நமது முக்கியமான இரண்டு கடவுள்களாக விளங்குகின்றனர்.

    மாநிலத்தில் ஆளும் சிவராஜ் சிங் சவுகான் மற்றும் மத்தியில் ஆளும் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி அவர்கள் இருவரையும் மறந்து விட்டனர்.



    முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் ஜன ஆசிர்வாத் யாத்திரை செல்வதற்காக மிகவும் அதிநவீன வசதிகளுடன் கூடிய  பேருந்து வடிவமைக்கப்பட்டு உள்ளது.

    பாஜகவினர் ஏசி கொட்டகைகளில் மட்டுமே உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். ஆனால், விவசாயிகள் நலனில் அக்கறை கொண்டுள்ள நாங்கள் சாதாரண கொட்டகைகளில் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறோம்.

    காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகள் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும், பெண்களுக்கு உரிய பாதுகாப்பு  அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். #JyotiradityaScindia #BJP
    மத்தியப்பிரதேசம் மாநில காங்கிரஸ் மூத்த தலைவர் ஜோதிராதித்யா சிந்தியாவை சுட்டுகொன்று விடுவேன் என பாஜக எம்.எல்.ஏ. மகன் பேஸ்புக்கில் கொலை மி்ரட்டல் விடுத்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. #JyotiradityaScindia
    போபால்:

    மத்தியப்பிரதேச மாநிலத்திற்கு விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அங்குள்ள தாமோக் மாவட்டம் விதான்சபா தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்து வருகிறார் தேவி கஹாதிக். இவர் பாஜகவை சேர்ந்தவர். இவரது மகன் பிரி்னஸ்தீப்.

    இவர் தனது பேஸ்புக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் ஜோதிராதித்யா சிந்தியாவுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

    அதில், தனது தாயார் தொதிக்குள் வரும் 5-ம் தேதி ஜோதிராதித்யா சிந்தியா பிரசாரம் செய்ய வருவதாக தெரியவந்துள்ளது. அவ்வாறு சிந்தியா தொகுதிக்குள் நுழைந்தால் அவரை நானே துப்பாக்கியால் சுட்டுக் கொல்வேன், உயிர்மீது ஆசை இருந்தால் தொகுதிக்குள் நுழையாதே என பதிவிட்டிருந்தார்.

    இதுகுறீத்து ஜோதிராதியா சிங் கூறுகையில், இந்த மிரட்டல் மூலம் பாஜகவின் உண்மையான முகத்தை அனைவரும் அறிந்து கொண்டுள்ளனர் என தெரிவித்தார்.

    மூத்த காங்கிரஸ் தலைவருக்கு பாஜக எம்.எல்.ஏ மகன் கொலை மிரட்டல் விடுத்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. #JyotiradityaScindia
    ×