செய்திகள்

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அடுத்த வாரம் கைலாஷ் மானசரோவர் யாத்திரை செல்கிறார்

Published On 2018-08-29 20:08 GMT   |   Update On 2018-08-29 20:08 GMT
செப்டம்பர் முதல் வாரத்தில் ராகுல் காந்தி கைலாஷ் மானசரோவர் யாத்திரை செல்லவுள்ளார் என காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. #KailashMansarovarYatra #Rahulgandhi
புதுடெல்லி:

கர்நாடகம் மாநில சட்டசபை தேர்தல் முடிந்ததும் கைலாஷ் மானசரோவர் யாத்திரை செல்வதற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஏற்கனவே முடிவு செய்திருந்தார். இதற்காக, சிறப்பு அனுமதி கோரி மத்திய வெளியுறவு துறை அமைச்சகத்திடம் விண்ணப்பம் செய்துள்ளார்.

இந்நிலையில், அடுத்த வார இறுதியில் ராகுல் காந்தி கைலாஷ் மானசரோவர் யாத்திரை செல்லவுள்ளார் என காங்கிரஸ் கட்சியினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அந்த கட்சியினர் கூறுகையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி செப்டம்பர் முதல் வாரத்தில் கைலாஷ் மானசரோவர் யாத்திரை செல்லவுள்ளார். நேபாளம் வழியாக செல்வது தொடர்பாக வெளியுறவு துறையிடம் அனுமதியும் கேட்டுள்ளார். இதையடுத்து, அடுத்த வாரம் ராகுல் காந்தி கைலாஷ் மானசரோவர் யாத்திரை செல்லவுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. #KailashMansarovarYatra #Rahulgandhi
Tags:    

Similar News