செய்திகள்
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் - ராணுவ வீரர் உள்பட 2 பேர் பலி
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் ராணுவ வீரர் உள்பட 2 பேர் பலியாகினர். #MilitantsAttack
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தின் காகாபோரா பகுதியில் உள்ள படைவீரர்கள் முகாமை குறிவைத்து பயங்கரவாதிகள் நேற்று நள்ளிரவு தாக்குதல் நடத்தினர்.
அவர்களின் தாக்குதலுக்கு ராணுவ வீரர்களும் தகுந்த பதிலடி கொடுத்தனர். இந்த தாக்குதலில் ராணுவ வீரர் ஒருவரும், பிலால் அகமது என்ற நபரும் படுகாயம் அடைந்தனர்.
சக வீரர்கள் இருவரையும் மீட்டு, மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்கள் சிகிச்சை பலனின்றி இறந்தனர்.
இதையடுத்து, அந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
ரம்ஜான் மாதத்தை முன்னிட்டு மத்திய அரசு அறிவித்துள்ள போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. #MilitantsAttack