search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "militants attacked"

    ஜம்மு காஷ்மீரில் சிறுபான்மையாக உள்ள இந்து, சீக்கியம் உள்ளிட்ட மதத்தினரை குறிவைத்து கடந்த சில நாட்களாக பயங்கரவாத தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.
    ஸ்ரீநகர்:

    ஜம்முவின் சம்பா மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராஜ்னி பாலா (36). இவர் காஷ்மீரின் குல்காம் மாவட்டம் கோபால்புரா பகுதியில் உள்ள அரசு பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர் இந்து மதத்தைச் (காஷ்மீரி பண்டிட்) சேர்ந்தவராவார்.

    இன்று காலை ஆசிரியை ராஜ்னி பள்ளிக்கூடத்தில் வழக்கமான பணிகளைச் செய்துகொண்டிருந்தார். அப்போது, பள்ளியில் துப்பாக்கியுடன் நுழைந்த பயங்கரவாதிகள் ராஜ்னியை சரமாரியாக சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

    பயங்கரவாதிகள் சுட்டதில் ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்து படுகாயமடைந்த ஆசிரியை ராஜ்னியை மீட்ட சக ஆசிரியர்கள் அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனையில் ராஜ்னியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக அறிவித்தனர்.

    துப்பாக்கிச்சூடு சம்பவத்தைத் தொடர்ந்து பள்ளிக்கூடம் அமைந்துள்ள பகுதியைச் சுற்றிவளைத்த பாதுகாப்புப் படையினர் தப்பியோடிய பயங்கரவாதிகளை தேடி வருகின்றனர்.

    காஷ்மீரில் இம்மாதத்தில் இதுவரை 7 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். அதில் 3 பேர் பணியில் இல்லாத போலீசார், 4 பேர் பொதுமக்கள் ஆவர்.
    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் ராணுவ வீரர் உள்பட 2 பேர் பலியாகினர். #MilitantsAttack
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தின் காகாபோரா பகுதியில் உள்ள படைவீரர்கள் முகாமை குறிவைத்து பயங்கரவாதிகள் நேற்று நள்ளிரவு தாக்குதல் நடத்தினர்.

    அவர்களின் தாக்குதலுக்கு ராணுவ வீரர்களும் தகுந்த பதிலடி கொடுத்தனர். இந்த தாக்குதலில் ராணுவ வீரர் ஒருவரும், பிலால் அகமது என்ற நபரும் படுகாயம் அடைந்தனர்.

    சக வீரர்கள் இருவரையும் மீட்டு, மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்கள் சிகிச்சை பலனின்றி இறந்தனர்.
    இதையடுத்து, அந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. 

    ரம்ஜான் மாதத்தை முன்னிட்டு மத்திய அரசு அறிவித்துள்ள போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. #MilitantsAttack
    ×