செய்திகள்
ஆர்.எஸ்.எஸ். தலைவருடன் அமித் ஷா சந்திப்பு - 4 மணி நேரம் முக்கிய ஆலோசனை
ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், பா.ஜ.க. தேசிய தலைவர் அமித் ஷா ஆகியோர் இன்று சந்தித்து பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக 4 மணி நேரம் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டனர். #AmitShah #MohanBhagwat
இந்தூர்:
பா.ஜ.க. தேசிய தலைவர் அமித் ஷா மத்தியப்பிரதேசம் மாநிலம், நாக்பூர் நகரில் உள்ள ஆர்.எஸ்.எஸ். தலைமை நிலையத்துக்கு இன்று பிற்பகல் சுமார் 12.20 மணியளவில் வந்தார்.
அங்கிருந்த ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், மற்றும் பொதுச்செயலாளர் பய்யாஜி ஜோஷி ஆகியோரை சந்தித்த அவர் அரசியல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக 4 மணி நேரம் முக்கிய ஆலோசனை நடத்தினார்.
பின்னர், மாலை 4.40 மணியளவில் அவர்களிடமிருந்து விடைபெற்று சென்றார்.
இதேபோல், விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் சர்வதேச தலைவராக சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட விஷ்ணு சதாஷிவ் கோக்ஜே மற்றும் மத்திய மந்திரி உமா பாரதி ஆகியோரும் இன்று ஆர்.எஸ்.எஸ். தலைமை நிலையத்தில் மோகன் பகவத் உள்ளிட்டோரை சந்தித்துப் பேசினர். #tamilnews #AmitShah #MohanBhagwat