செய்திகள்
கள்ளக்காதல் விவகாரத்தில் தாய்-தந்தை, 2 குழந்தைகளை விஷம் வைத்து கொன்ற பெண்
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் தனது தாய்- தந்தை, மற்றும் 2 குழந்தைகளையும் விஷம் வைத்து கொன்ற பெண்ணை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் பினராய் என்ற இடத்தை சேர்ந்தவர் குஞ்சி கண்ணன் (வயது 78). இவரது மனைவி கமலா (65). இந்த தம்பதியின் மகள் சவுமியா (28). இவரது மூத்த மகள் ஐஸ்வர்யா (9), இளைய மகள் கீர்த்தனா (1).
சில மாதங்கள் இடைவெளியில் கீர்த்தனா, ஐஸ்வர்யா, கமலா, குஞ்சி கண்ணன் ஆகியோர் மரணம் அடைந்தனர். இவர்கள் அனைவரும் வாந்தி, மயக்கம் ஏற்பட்ட நிலையில் அந்த பகுதியில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டனர்.
கேரள முதல்-மந்திரி பினராய் விஜயனின் சொந்த ஊரான பினராயில் ஒரே குடும்பத்தில் 4 பேர் அடுத் தடுத்து மரணம் அடைந்தது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுபற்றி போலீஸ் அதிகாரிகளுக்கும் பல்வேறு புகார்கள் சென்றன. இதைதொடர்ந்து டி.எஸ்.பி. தலைமையில் தனி போலீஸ் படையும் அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வந்தது.
இந்த நிலையில் சவுமியாவும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு அந்த பகுதியில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல் நிலை சீரானதும் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். முதலில் போலீசாரின் விசாரணைக்கு சவுமியா சரியான முறையில் ஒத்துழைப்பு கொடுக்கவில்லை.
ஆனால் போலீசார் தங்கள் விசாரணையை தீவிரப்படுத்தியபோது தாய், தந்தை மற்றும் 2 குழந்தைகளை சவுமியா விஷம் வைத்து கொன்ற திடுக்கிடும் தகவல் வெளியானது.
உணவில் விஷம் வைத்து கொல்லப்பட்ட தாய், தந்தை
இந்த 4 பேரின் உணவிலும் எலி மருந்து விஷத்தை சவுமியா கலந்து வைத்து அவர்களை கொடூரமான முறையில் கொலை செய்து உள்ளார். சவுமியாவுக்கும் அந்த பகுதியை சேர்ந்த சில வாலிபர்களுக்கும் நெருங்கிய பழக்கம் இருந்துள்ளது. இந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறியதால் அவரை பெற்றோர் கண்டித்துள்ளனர். எனவே தனது கள்ளக்காதலர்களுடன் உல்லாச வாழ்க்கை வாழ்வதற்காக பெற்ற தாய், தந்தையையும், 2 குழந்தைகளையும் சவுமியா தீர்த்துக்கட்டியதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. போலீசாருக்கு தன் மீது சந்தேகம் ஏற்படக்கூடாது என்பதற்காக அவரும் வாந்தி மயக்கம் ஏற்பட்டது போல ஆஸ்பத்திரியில் சேர்ந்து நாடகமாடி உள்ளார்.
உணவில் விஷம் வைத்து கொல்லப்பட்ட 2 குழந்தைகள்
இதைதொடர்ந்து சவுமியாவை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரது வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்ற சில வாலிபர்களும் போலீஸ் பிடியில் சிக்கி உள்ளனர். அவர்களிடமும் விசாரணை நடந்து வருகிறது.
மேலும் சவுமியாவால் விஷம் வைத்து கொல்லப்பட்ட 4 பேரின் பிணத்தையும் தோண்டி எடுத்து அவற்றை ரசாயன பரிசோதனைக்கு உட்படுத்தவும் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.#tamilnews
கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் பினராய் என்ற இடத்தை சேர்ந்தவர் குஞ்சி கண்ணன் (வயது 78). இவரது மனைவி கமலா (65). இந்த தம்பதியின் மகள் சவுமியா (28). இவரது மூத்த மகள் ஐஸ்வர்யா (9), இளைய மகள் கீர்த்தனா (1).
சில மாதங்கள் இடைவெளியில் கீர்த்தனா, ஐஸ்வர்யா, கமலா, குஞ்சி கண்ணன் ஆகியோர் மரணம் அடைந்தனர். இவர்கள் அனைவரும் வாந்தி, மயக்கம் ஏற்பட்ட நிலையில் அந்த பகுதியில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டனர்.
கேரள முதல்-மந்திரி பினராய் விஜயனின் சொந்த ஊரான பினராயில் ஒரே குடும்பத்தில் 4 பேர் அடுத் தடுத்து மரணம் அடைந்தது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுபற்றி போலீஸ் அதிகாரிகளுக்கும் பல்வேறு புகார்கள் சென்றன. இதைதொடர்ந்து டி.எஸ்.பி. தலைமையில் தனி போலீஸ் படையும் அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வந்தது.
இந்த நிலையில் சவுமியாவும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு அந்த பகுதியில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல் நிலை சீரானதும் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். முதலில் போலீசாரின் விசாரணைக்கு சவுமியா சரியான முறையில் ஒத்துழைப்பு கொடுக்கவில்லை.
ஆனால் போலீசார் தங்கள் விசாரணையை தீவிரப்படுத்தியபோது தாய், தந்தை மற்றும் 2 குழந்தைகளை சவுமியா விஷம் வைத்து கொன்ற திடுக்கிடும் தகவல் வெளியானது.
இந்த 4 பேரின் உணவிலும் எலி மருந்து விஷத்தை சவுமியா கலந்து வைத்து அவர்களை கொடூரமான முறையில் கொலை செய்து உள்ளார். சவுமியாவுக்கும் அந்த பகுதியை சேர்ந்த சில வாலிபர்களுக்கும் நெருங்கிய பழக்கம் இருந்துள்ளது. இந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறியதால் அவரை பெற்றோர் கண்டித்துள்ளனர். எனவே தனது கள்ளக்காதலர்களுடன் உல்லாச வாழ்க்கை வாழ்வதற்காக பெற்ற தாய், தந்தையையும், 2 குழந்தைகளையும் சவுமியா தீர்த்துக்கட்டியதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. போலீசாருக்கு தன் மீது சந்தேகம் ஏற்படக்கூடாது என்பதற்காக அவரும் வாந்தி மயக்கம் ஏற்பட்டது போல ஆஸ்பத்திரியில் சேர்ந்து நாடகமாடி உள்ளார்.
இதைதொடர்ந்து சவுமியாவை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரது வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்ற சில வாலிபர்களும் போலீஸ் பிடியில் சிக்கி உள்ளனர். அவர்களிடமும் விசாரணை நடந்து வருகிறது.
மேலும் சவுமியாவால் விஷம் வைத்து கொல்லப்பட்ட 4 பேரின் பிணத்தையும் தோண்டி எடுத்து அவற்றை ரசாயன பரிசோதனைக்கு உட்படுத்தவும் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.#tamilnews